/* */

கனமழையின் காரணமாக தண்டவாளம் தண்ணீரில் மூழ்கியது. ரயில்கள் தாமதம்

ஜோலார்பேட்டையில் நேற்று இரவு விடிய விடிய பெய்த கனமழையின் காரணமாக தண்டவாளத்தில் தண்ணீரில் மூழ்கியதால் ரயில்கள் தாமதமாக சென்றது

HIGHLIGHTS

கனமழையின் காரணமாக தண்டவாளம் தண்ணீரில் மூழ்கியது. ரயில்கள் தாமதம்
X

ஜோலார்பேட்டை ரயில்நிலையத்தில் கனமழை காரணமாக தண்டவாளங்கள் நீரில் மூழ்கின

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று இரவு முழுவதும் பெய்த தொடர் மழையின் காரணமாக ஜோலார்பேட்டை இரயில் நிலைய சந்திப்பில் 3 மற்றும் 4-வது நடைமேடைகளில் குளம் போல தண்ணீர் தேங்கி நின்றது.

இதன் காரணமாக காலை 5 மணிக்கு புறப்பட்ட வேண்டிய ஏலகிரி எக்ஸ்பிரஸ் ஒரு மணி நேரம் காலதாமதமாக 6 மணிக்கு புறப்பட்டு சென்றது. மேலும் இந்த மார்க்கத்தில் பெங்களூர் அதாதியா பயணிகள் ரயில் ஒரு மணி நேரம் காலதாமதமாகவும் மற்றும் சேலம் மார்க்கமாக செல்லக்கூடிய அனைத்து ரயில்களும் காலதாமதமாக சென்றன.

தண்டவாளத்தில் தேங்கிய தண்ணீரை நீர் உறிஞ்சும் மோட்டார் மூலம் தண்ணீரை அப்புறப்படுத்திய பின்னர் ரயில்கள் ஒன்றன்பின் ஒன்றாக சென்றன

Updated On: 10 Aug 2021 8:15 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  3. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  6. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  7. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  8. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி