மீண்டும் புழலுக்கு சென்ற பேரறிவாளன்

மீண்டும் புழலுக்கு சென்ற பேரறிவாளன்
X

பேரறிவாளன்

ஜாமின் பெறுவதற்காக பேரறிவாளன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று காலை புழல் சிறைக்கு மீண்டும்அழைத்துச் செல்லப்பட்டார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியில் உள்ள தனது வீட்டில் கடந்த ஒன்பது மாதங்களாக பரோலில் இருந்த பேரறிவாளன் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி ஜாமீன் வழங்கப்பட்டு 11ம் தேதி புழல் சிறைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார்.

உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கிய படிவத்தை ஆன்லைனில் பேரறிவாளனுடைய வழக்கறிஞர் எடுத்துக்கொண்டு புழல் சிறைக்கு சென்றார். அப்போது புழல் சிறை அலுவலகத்திற்கு உச்சநீதிமன்ற தீர்ப்பு வரவில்லை என்பதால், மீண்டும் ஜோலார்பேட்டையில் உள்ள அவருடைய வீட்டுக்கு திரும்பினர்.

இந்நிலையில் மீண்டும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி ஜாமின் பெறுவதற்காக இன்று காலை 6.30மணி அளவில் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மணிமாறன் தலைமையில் சுமார் 15க்கும் மேற்பட்ட ஆயுதப்படை காவலர்களுடன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

Tags

Next Story
ai in future agriculture