/* */

நாட்றம்பள்ளி தாலுக்கா அலுவலகத்தில் புதிய மின்னணு குடும்ப அட்டை வழங்கும் விழா

நாட்றம்பள்ளி தாலுக்கா அலுவலகத்தில் புதிய மின்னணு குடும்ப அட்டையை எம்எல்ஏ தேவராஜ், நல்லதம்பி ஆகியோர் வழங்கினார்கள்

HIGHLIGHTS

நாட்றம்பள்ளி தாலுக்கா அலுவலகத்தில் புதிய மின்னணு குடும்ப அட்டை வழங்கும் விழா
X

 புதிய மின்னணு குடும்ப அட்டையை எம்எல்ஏ தேவராஜ் வழங்கினார் 

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுக்கா அலுவலகத்தில் தமிழக உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் விழா நாட்றம்பள்ளி வட்ட வழங்கல் அலுவலர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளராக ஜோலார்பேட்டை எம்எல்ஏ தேவராஜ் கலந்து கொண்டு 640 நபர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கினார். இதில் முன்னாள் எம்எல்ஏ சூரியகுமார், நாட்றம்பள்ளி தாசில்தார் மகாலட்சுமி, மற்றும் அரசு அதிகாரிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

இதேபோல் திருப்பத்தூர் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயன் தலைமையில் புதிய மின்னணு குடும்ப அட்டை வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் எம்எல்ஏ நல்லதம்பி கலந்து கொண்டு 34 திருநங்கைகள் உட்பட 1495 நபர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கினார்.

இதில் திருப்பத்தூர் வட்டாட்சியர் சிவப்பிரகாசம், திருப்பத்தூர் வட்ட வழங்கல் அலுவலர் கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 6 Aug 2021 2:22 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து உண்பதின் அவசியம் என்ன..?...
  2. லைஃப்ஸ்டைல்
    10 ஆண்டு திருமண நாள் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. நாமக்கல்
    திருச்செங்கோடு நகராட்சி குப்பைக்கிடங்கில் தீ விபத்து: மாவட்ட ஆட்சியர்...
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கிளியே காதல் கிளியே, உன்னை நான் காதலிக்கலையே...! - மறைமுக...
  5. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் முயல் வேட்டையாடிய 10 பேர் கைது ரூ.1 லட்சம் அபராதம்
  6. லைஃப்ஸ்டைல்
    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே - திருமண நாள் வாழ்த்துக்கள்
  7. திருவள்ளூர்
    ஆக்சிஜன் சிலிண்டருடன் மனு கொடுக்க வந்த நுரையீரல் பாதிக்கப்பட்ட நபர்
  8. கோவை மாநகர்
    கோவையில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு மர்ம நபர்கள் தீ...
  9. பொள்ளாச்சி
    ஆனைமலை ஆற்றில் கலக்கும் கழிவு நீருடன் மனு கொடுக்க வந்த சமூக ஆர்வலர்
  10. குமாரபாளையம்
    மதுக்கடை பார் ஊழியரை தாக்கியதாக அ.தி.மு.க. நகர செயலாளர் மீது புகார்