/* */

நாட்றம்பள்ளி அருகே மினி லாரியில் கடத்தப்பட்ட ரேஷன் அரிசி பறிமுதல்

நாட்றம்பள்ளி அருகே மினி லாரியில் கடத்தப்பட்ட 4 டன்  ரேஷன் அரிசியை வருவாய் துறையினர் பறிமுதல் செய்தனர். ஓட்டுனர் தப்பி ஓட்டம்

HIGHLIGHTS

நாட்றம்பள்ளி அருகே மினி லாரியில் கடத்தப்பட்ட ரேஷன் அரிசி பறிமுதல்
X

நாட்றம்பள்ளி அருகே மினி லாரியில் கடத்தப்பட்ட 4 டன்  ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே ரேஷன் அரிசி கடத்துவதாக மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் விஜயன் என்பவருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் வருவாய்த்துறையினர் பச்சூர் அடுத்த கொண்டகிந்தனப்பள்ளி அருகே சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியே ஆந்திராவுக்கு கடத்திச் செல்ல 4 டன் ரேஷன் அரிசியுடன் ஒரு மினி லாரி வந்து கொண்டிருந்தது. வருவாய்த்துறையினர வருவதைக் கண்ட ஓட்டுநர் லாரியை நிறுத்திவிட்டு தப்பி ஓடினார்

அதனை தொடர்ந்து லாரியை பறிமுதல் செய்த வருவாய்த்துறையினர் நாட்றம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். ரேஷன் அரிசி கடத்தியது யார் எங்கிருந்து வந்தது என்பது குறித்து வருவாய் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Updated On: 17 Jun 2021 11:31 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  3. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  4. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  6. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  7. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  8. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  9. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  10. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு