உள்ளாட்சித்தேர்தல்: நாட்றாம்பள்ளி ஒன்றியத்தில் இன்று 25 பேர் வேட்புமனு தாக்கல்

திருப்பத்தூர் மாவட்டத்தில் வருகின்ற 6,9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது,
அதனையடுத்து கடந்த 15 ந்தேதி முதல் தேர்தலில் போட்டியிடுவோர் தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்து வருகின்றனர், வரும் 22ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள்.
இந்நிலையில் நாட்றாம்பள்ளி ஒன்றியத்தில் இன்று (21.09.2021) ஒன்றிய கவுன்சிலருக்கு 2 பேரும், ஊராட்சி மன்றத் தலைவருக்கு 7 பேரும், ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு 16 பேரும் வேட்புமனுவை தாக்கல் செய்து உள்ளனர்,
கடந்த ஐந்து நாட்களில் மாவட்ட கவுன்சிலருக்கு 2 பேரும், ஒன்றிய கவுன்சிலருக்கு 6 பேரும், ஊராட்சி மன்றத் தலைவருக்கு 78 பேரும், ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு 326 பேரும் இதுவரை தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்து உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu