/* */

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பயண அட்டை வழங்கும் முகாம் நாளை தொடக்கம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பயண அட்டை வழங்கும் முகாம் நாளை தொடங்குகிறது.

HIGHLIGHTS

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பயண அட்டை வழங்கும் முகாம் நாளை தொடக்கம்
X

திருப்பத்தூர் கலெக்டர் அமர் குஷ்வாஹா

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு 2022-23-ம் ஆண்டிற்கான இலவச பேருந்து சலுகை அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நாளை (திங்கட்கிழமை) முதல் வருகிறத 31-ந் தேதி வரை நடக்கிறது.

திருப்பத்தூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நடைபெறும் முகாமில் இலவச பயணஅட்டை நேரடியாக புதுப்பித்து வழங்கப்படும். இதில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. என தெரிவித்துள்ளார்

Updated On: 27 March 2022 12:45 PM GMT

Related News