/* */

திருப்பத்தூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வு

திருப்பத்தூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

HIGHLIGHTS

திருப்பத்தூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வு
X

கொரோனா குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் குஷ்வாஹா வழங்கினார்

கொரோனா நோய் தொற்று 3வது அலை தற்போது அண்டை மாநிலங்களில் அதிகம் தீவிரமடைந்து வருகின்றன. இந்தநிலையில் தமிழகத்தில் கொரோனா கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

தற்போது மூன்றாம் அலை ஏற்படுவதற்கு வாய்ப்புள்ள நிலையில் , திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய பகுதிகளில் நோய்த் தொற்றில் இருந்து மக்கள் பாதுகாக்க இருக்க விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் ஜோலார்பேட்டை பகுதியில் இன்று கொரோனா நாள் வார விழிப்புணர்வு நாள் ஏற்படுத்தும் வகையில் பொது மக்கள் கூடும் பகுதிகளில் முகக் கவசங்கள் கட்டாயம் அணிய வேண்டும் கைகளை சுத்தமாகக் கழுவுவது எப்படி என பொதுமக்கள் மத்தியில் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா செய்து காண்பித்தார், அதனை தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.

இதேபோன்று வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பகுதியில் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி தலைமையில் அப்பகுதியில் கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வட்டாட்சியர் மோகன் வழங்கி கைகளை சுத்தமாகக் கழுவுவது எப்படி என பொதுமக்களிடம் காண்பித்தார் மேலும் இதேபோன்று பல்வேறு பகுதிகளில் கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டன இந்த நிகழ்வில் அரசுத்துறை சார்ந்த அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்

Updated On: 2 Aug 2021 1:50 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. கலசப்பாக்கம்
    படவேடு பகுதியில் கனமழையால் வாழை தோட்டங்கள் பாதிப்பு: எம்எல்ஏ ஆய்வு
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை புதிய பேருந்து நிலைய பணிகள்: கூடுதல் தலைமைச் செயலாளர்...
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் அனைத்து துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்து ஆய்வு...
  6. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு
  7. திருவண்ணாமலை
    திடீர் மழையால் குளிர்ந்த அக்னி ஸ்தலம், மக்கள் மகிழ்ச்சி
  8. வந்தவாசி
    சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்
  9. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  10. வீடியோ
    தீவிரவாதிகள் விவகாரத்தில் மீண்டும் அம்பலப்பட்ட Congress ! வைரலாகும்...