/* */

திருப்பத்தூர் மாவட்டத்தில் 39 டாஸ்மாக் கடைகள் இன்று திறக்கப்பட்டது

திருப்பத்தூர் மாவட்டத்தில் 39 டாஸ்மாக் கடைகள் இன்று திறக்கப்பட்டு அரசு அறிவித்துள்ள விதிமுறைகளின்படி மது விற்பனை தொடங்கியது

HIGHLIGHTS

திருப்பத்தூர் மாவட்டத்தில் 39 டாஸ்மாக் கடைகள் இன்று திறக்கப்பட்டது
X

கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு கடந்த மாதம் 10ஆம் தேதி முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து அதே நேரத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளும் மூடப்பட்டது.

இந்தநிலையில் கொரோனா நோய்த் தொற்றானது படிப்படியாக குறைந்து வரும் நிலையில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளன இதன் காரணமாக இன்று முதல் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்து இருந்தன .

அதன்படி இன்று காலை 10 மணி முதல் திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், ஆம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 39 கடைகள் திறக்கப்பட்டுள்ளன. அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை பின்பற்றி அதாவது மது விற்பனை செய்பவர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து இருக்க வேண்டும், மது வாங்கும் நபர்கள் முகக்கவசம் அணிந்து மது வாங்க வேண்டும் மேலும் தனி மனித இடைவெளியை கடைப்பிடித்து வரவேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்திருந்தனர். அதனடிப்படையில் தற்பொழுது மது பிரியர்கள் டாஸ்மாக் கடையில் நீண்ட நேரம் காத்திருந்து அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை பின்பற்றி மது வாங்கி செல்கின்றனர் இதற்காக ஒவ்வொரு மது விற்பனை கடைகள் முன்பும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

Updated On: 14 Jun 2021 9:34 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...
  2. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!
  3. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  5. வீடியோ
    மிஷ்கின் படத்தில எல்லாமே violenceஅது societyக்கு...
  6. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  7. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    ஆணவம்: வாழ்வை சிதைக்கும் நஞ்சு
  9. லைஃப்ஸ்டைல்
    பன்முகத்திறனில் தனித்த அடையாளம், சட்டமேதை அம்பேத்கர்..!
  10. வீடியோ
    🔴LIVE: கர்நாடகாவில் அண்ணாமலை அனல் பறக்கும் பேச்சு! | தொண்டர்கள்...