நெல்லையில் பணியாளர் தேர்வாணைய தேர்வு வரும் 8ம் தேதி நடைபெற உள்ளது.
![நெல்லையில் பணியாளர் தேர்வாணைய தேர்வு வரும் 8ம் தேதி நடைபெற உள்ளது. நெல்லையில் பணியாளர் தேர்வாணைய தேர்வு வரும் 8ம் தேதி நடைபெற உள்ளது.](https://www.nativenews.in/h-upload/2022/04/28/1524822-ssc.webp)
பைல் படம்
பணியாளர் தேர்வாணைய தேர்வு Paper-II (Descriptive paper) of Multi Tasking (Non- Technical) Tier-ஈ திருநெல்வேலி மாவட்டத்தில் 08.05.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 11.00 மணி முதல் 11.30 மணி வரை நடைபெறவுள்ள்ளது
மேற்படி தேர்வானது திருநெல்வேலி மாவட்டத்தில் மேக்தலீன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ரகுமத்நகர் பாளையங்கோட்டை. தேர்வு மையத்தில் வைத்து நடைபெறுகின்றது. இந்த தேர்வினை 163 தேர்வர்கள் தேர்வெழுத உள்ளனர்.
தேர்வு நாளன்று தடைபடாத மின்சாரம் வழங்கவும், பேருந்துகளை தேர்வு மையத்திற்கு கூடுதலாக இயக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் கல்வி நிலையத்திற்கு காவல் துறை மூலம் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திடவும், தேர்வு நடைபெறும் மையத்தின் அருகாமையில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவக் குழுக்கள் மற்றும் 108 ஆம்புலன்ஸ் வசதிகள் செய்து தயார் நிலையில் வைத்திடவும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தேர்வு எழுதும் தேர்வர்கள் அதிக எண்ணிக்கையில் வர இருப்பதால் தேர்வு மையங்களில் "கொரோனா" பரவலை தடுக்கும் பொருட்டு சுத்தப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
தேர்வு எழுத வரும் தேர்வர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வருவதுடன் சமூக இடைவெளியை கடைப்பிடித்திடவும், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றிடவும் வேண்டும்.
மேலும், தேர்வு அறையினுள் செல்போன்களை எடுத்துச் செல்லக்கூடாது. தேர்வு எழுதுபவர்கள் தவிர இதர நபர்கள் தேர்வு மைய வளாகத்திற்குள் செல்வதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu