சத்தியம் டிவி அலுவலகம் தாக்குதலைக் கண்டித்து நெல்லையில் ஆர்ப்பாட்டம்

சத்தியம் டிவி அலுவலகம் தாக்குதலைக் கண்டித்து நெல்லையில் ஆர்ப்பாட்டம்
X

சத்தியம் டிவி அலுவலகம் தாக்குதலைக் கண்டித்து நெல்லையில் பத்திரிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். 

தாக்குதல் நடத்தியவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி, பத்திரிக்கை மற்றும் ஊடகவியலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

சத்தியம் டிவி அலுவலகத்தில் கொலைவெறி தாக்குதல் நடத்திய ராஜேஷ்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி நெல்லையில் பத்திரிக்கை மற்றும் ஊடகவியலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

சென்னையில் உள்ள சத்தியம் டிவி தலைமை தொலைக்காட்சி அலுவலகத்தில் கடந்த 3ஆம் தேதி கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டது. இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பத்திரிக்கை மற்றும் ஊடகவியலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் நெல்லை மாவட்ட பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்கள் சார்பில் நெல்லை சத்தியம் டிவி நிருபர் பாலாஜி தலைமையில் பாளையங்கோட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சத்தியம் டிவி அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து கொலைவெறி தாக்குதல் நடத்திய தொழிலதிபர் என்ற போர்வையில் சுற்றி வரும் ராஜேஷ்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பத்திரிக்கை மற்றும் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Tags

Next Story
ai in future agriculture