/* */

வெளிமாநிலங்களுக்கு கடத்த முயன்ற தாதுமணல் லாரியுடன் பறிமுதல்.

திருநெல்வேலி மாவட்டம் குட்டம் பகுதியிலிருந்து கோவை வழியாக வெளிமாநிலங்களுக்கு கடத்த முயன்ற தாதுமணல் லாரியுடன் பறிமுதல்.

HIGHLIGHTS

வெளிமாநிலங்களுக்கு கடத்த முயன்ற தாதுமணல் லாரியுடன் பறிமுதல்.
X

தாதுமணல் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது

திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், தூத்துக்குடி மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளிலும், கன்னியாகுமரி மாவட்டத்திலும் தாதுமணலான கார்னட் இலுமனைட் உள்ளிட்டவை பிரித்தெடுக்கப்பட்டு வெளிநாடு, வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. மத்திய அரசு தாது மணல் அள்ள தடை விதித்துள்ளதால் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக தாதுமணல் அள்ளபடவில்லை என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தாதுமணல் அள்ளி கடத்தப்படுவதாக குட்டம் அருகே உள்ள கிராமத்தினர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். மீனவர்களுக்கு தேவையான உதவிகளை சிறிய உதவிகளை செய்துவிட்டு தாது மணல் கடற்கரை பகுதியில் அள்ளப்பட்டு அதில் உள்ள தாதுக்கள் பிரித்தெடுக்கப்பட்டு ஏற்றுமதி தொடர்ந்து நடைபெற்று வருவதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், அரசின் சார்பில் ஆய்வுகள் நடத்தி மணல் அள்ளபடவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் திருநெல்வேலி, மதுரை நான்கு வழி சாலை கேடிசி நகர் பகுதியில் கோவையை சேர்ந்த டாரஸ் லாரியை காவல்துறையின் சிறப்புப் பிரிவினர் நிறுத்தி சோதனை செய்ததில் அதில் தடை செய்யப்பட்ட இலுமனைட் தாதுமணல் 10 கிலோ பைகளில் அடைக்கப்பட்டு 25 டன் அளவில் கொண்டு செல்லப்படுவது தெரியவந்தது.

திசையன்விளையை அடுத்த குட்டம் பகுதியில் இருந்து கோவைக்கு கொண்டு செல்லப்படுவதாகவும், அங்கிருந்து வெளி மாநிலங்கள் மூலமாக வெளிநாடுகளுக்கு கடத்த உள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஒரு டன் தாது மணல் இருபது லட்ச ரூபாய் வரை இருக்கலாம் என்ற நிலையில் 25 டன் தாது மணலின் மதிப்பு 5 கோடி ரூபாய் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள லாரியில் இருக்கும் மணலை கனிம வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

Updated On: 20 April 2022 9:31 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?