முன்னாள் படைவீரர்களின் சிறார்கள் இராணுவ அலுவலராக பயிற்சி பெற விண்ணப்பிக்க அழைப்பு
![முன்னாள் படைவீரர்களின் சிறார்கள் இராணுவ அலுவலராக பயிற்சி பெற விண்ணப்பிக்க அழைப்பு முன்னாள் படைவீரர்களின் சிறார்கள் இராணுவ அலுவலராக பயிற்சி பெற விண்ணப்பிக்க அழைப்பு](https://www.nativenews.in/h-upload/2022/06/03/1540839-img-20210424-wa0035.webp)
திருநெல்வேலி மாவட்டம் முன்னாள் படைவீரர்களின் சிறார்கள் இராணுவ அலுவலராக பயிற்சி பெற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு அறிவிப்பு.
இராணுவத்தில் அலுவலராக பணியில் சேர்ந்திட UPSCஆல் நடத்தப்படவுள்ள COMBINED DEFENCE SERVICES EXAMINATION-|| தேர்வு 04.09.2022 அன்று நடைபெறவுள்ளது. இத்தேர்வில் கலந்து கொள்ள http://upsconline.nic.in இணையதளத்தில் 07.06.2022-க்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும், தேர்விற்கு விண்ணப்பித்துள்ள திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு முன்னாள் படைவீரர் நலத்துறையால் பயிற்சி வழங்கப்படவுள்ளதால் முன்னாள் படைவீரர்களின் சிறார்கள் தங்களது பெயரினை முழு முகவரி மற்றும் தொலைபேசி எண்ணுடன் திருநெல்வேலி மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் தகவல் தெரிவிக்குமாறு திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu