/* */

நல்லாசிரியர் கவிஞர் கோ.கணபதிசுப்பிரமணியனுக்கு சேவை செம்மல் விருது

திருநெல்வேலி திருவள்ளுவர் பேரவை சார்பில், நல்லாசிரியர் கவிஞர் கோ.கணபதி சுப்பிரமணியனுக்கு சேவை செம்மல் விருது வழங்கி பாராட்டினர்.

HIGHLIGHTS

நல்லாசிரியர் கவிஞர் கோ.கணபதிசுப்பிரமணியனுக்கு சேவை செம்மல் விருது
X

முனைவர் கவிஞர் கோ.கணபதி சுப்பிரமணியன் பல்லாண்டுகளாக தமிழ்ப்பணி, சமுதாயப் பணி, கல்விப்பணி என்று பல்வேறு தளங்களில் விழிப்புணர்வு பணியாற்றி வருகிறார். கடந்த கொரோனா காலத்தில் முதல் அலையில் அறுபத்தி மூன்று நாட்கள் தினமும் 30 கிலோமீட்டர் விழிப்புணர்வு ஆட்டோ பிரச்சாரமும், இரண்டாவது அலையில் 55 நாட்கள் விழிப்புணர்வு பிரச்சாரம், செய்து 2 மாவட்ட ஆட்சியரிடம் பாராட்டுச் சான்றிதழ் பெற்றவர்.


வாக்காளர் விழிப்புணர்வு, நுகர்வோர் விழிப்புணர்வு, நூலக வளர்ச்சி, ஏழைப் பெண்கள் இலவச திருமண உதவி ,கல்வி உதவி, துயருற்றவருக்கு உதவி, இளைஞர் முன்னேற்றம், என பல தளங்களில் பணியாற்றி வருவதை முன்னிட்டு திருநெல்வேலி திருவள்ளுவர் கழகம் மூன்றாவது ஆண்டு விழாவில் சேவைச் செம்மல் விருது அளித்து பாராட்டி இருக்கின்றது.

விழாவிற்கு திருநெல்வேலி திருவள்ளுவர் பேரவை அமைப்பாளர் ந.ஜெயபாலன் தலைமை தாங்கினார். விருதினை பொருநை இலக்கிய வட்ட புரவலர் பொருநை நாதன் வழங்கினார். ஆந்திர மாநிலம் குப்பம் திராவிடன் பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைவர் முனைவர் பேராசிரியர் க.மாரியப்பன் பொன்னாடை அணிவித்து பாராட்டினார். நிகழ்வில் கவிஞர் பாப்பாகுடி இரா.செல்வமணி, கவிஞர் சக்தி வேலாயுதம், கவிஞர் செ.ச.பிரபு, கவிஞர்.சு.முத்துசாமி நூலகர் முனைவர் பாலசுப்பிரமணியன், உக்கிரன் கோட்டை மணி மற்றும் பலர் கலந்து கொண்டு பாராட்டினார்கள்.

Updated On: 3 Feb 2022 6:33 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  2. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  3. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  4. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  5. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  6. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...
  7. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  8. பூந்தமல்லி
    வழி தவறி சென்ற குழந்தைகளை ஒரு மணி நேரத்தில் மீட்டு கொடுத்த...
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...