/* */

நெல்லையில் உலக கால்நடை தின விழிப்புணர்வு பேரணி

கால்நடைத்துறை மருத்துவர்களின் பங்களிப்பு குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் உலக கால்நடை தின விழிப்புணர்வு பேரணி.

HIGHLIGHTS

நெல்லையில் உலக கால்நடை தின விழிப்புணர்வு பேரணி
X

நெல்லையில் உலக கால்நடை தினத்தை முன்னிட்டு அனைத்து துறை கால்நடை மருத்துவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

உலக கால்நடை தினத்தை முன்னிட்டு அனைத்து துறை கால்நடை மருத்துவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பிருந்து தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்றது. கால்நடைத்துறை மருத்துவர்களின் பங்களிப்பு குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பதாகைகளை ஏந்தி பேரணி நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் கடைசி சனிக்கிழமை அன்று உலக கால்நடை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டின் உலக கால்நடை தினம், கால்நடை பின்னடைவை வலுப்படுத்துதல் என்ற கருப்பொருளை முன் வைத்து கொண்டாடப்படுகிறது. விலங்குகள், மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்திற்காக கால்நடை மருத்துவர்களின் பங்களிப்பு குறித்து மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மூலம் நெல்லை மாவட்டத்தில் உள்ள கால்நடை மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் ஆகியோரை ஒன்றிணைத்து விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கால் நடை மருத்துவர்களின் செயல்பாடுகள் மற்றும் செயல்படும் விதம் குறித்த உறுதிமொழி எடுக்கப்பட்டது. அதை தொடர்ந்து நெல்லை மண்டல வன பாதுகாவலர் மற்றும் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக கள இயக்குனர் செந்தில்குமார், கால்நடை மருத்துவ கல்லூரி முதல்வர் பழனிச்சாமி உள்ளிட்டோர் இணைந்து விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடங்கிய பேரணி மாவட்ட அறிவியல் மையம், பிஎஸ்என்எல் வழியாக வண்ணாரப்பேட்டை செல்ல பாண்டியன் சிலை வரை சென்றது. பேரணியின்போது கால்நடைத்துறை மூலம் செய்யப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து கால்நடை துறையில் அறிவியல் ரீதியான தொழில் நுட்பங்களை பயன்படுத்தி வெற்றி கண்டது குறித்தும், பொது மக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் பதாகைகள் வைக்கப்பட்டது.

Updated On: 28 April 2022 12:28 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    தேனியில் கொந்தளித்த டெல்லி அதிகாரி..!
  2. தொழில்நுட்பம்
    மோட்டோரோலா எட்ஜ் 50 பியூஷன் அறிமுகம்: விலை, சலுகைகள், அம்சங்கள்!
  3. திருவள்ளூர்
    மாற்றம் தொண்டு நிறுவனம் சார்பில் பழங்குடியின குழந்தைகளுக்கு
  4. திருப்பரங்குன்றம்
    மதுரையில் பேருந்துக்குள் மழை..! நனைந்த பயணிகள்..!
  5. ஈரோடு
    ஈரோட்டில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றம் தொடர்பான மாவட்ட அளவிலான குழுக்...
  6. நாமக்கல்
    ப.வேலூரில் போதை ஊசி, மாத்திரை விற்பனை? 7 பேர் கொண்ட கும்பல் கைது
  7. லைஃப்ஸ்டைல்
    எனக்காக பிறந்தவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  8. திருவள்ளூர்
    தேர்வில் மதிப்பெண் குறைந்ததை கண்டித்ததால் மாணவன் விஷம் குடித்து...
  9. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே பாம்பு கடித்து தண்ணீர் பாய்ச்ச சென்ற விவசாயி...
  10. உசிலம்பட்டி
    மதுரை அருகே ,வயலில் சாக்கடை நீர் கலப்பா? பொதுமக்கள் ஆவேசம்!