Begin typing your search above and press return to search.
நெல்லை-பரவலாக பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி
நெல்லையில் கடும் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், திடீரென்று பெய்த கன மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்
HIGHLIGHTS
நெல்லையில் பரவலாக பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், நெல்லை உள்பட 10 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது, அந்தவகையில் நெல்லை மாவட்டத்தில் இன்று பிற்பகல் கருமேகங்கள் திரண்டு மழை பெய்ய தொடங்கியது,
சுமார் 30 நிமிடங்கள் பெய்த மழையால் நெல்லை மாநகர பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. கடந்த வாரம் வங்க கடலில் உருவான யாஸ் புயல் காரணமாக நெல்லை மாவட்டத்தில் மிதமான மழை பெய்தது. அதன்பிறகு கடந்த 5 நாட்களாக நெல்லை மாவட்டத்தில் வெயில் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் இன்று பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.