நெல்லை-பெட்ரோல்,டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. தற்போது பெட்ரோல் 97.57 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இதனை மத்திய அரசு உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என்று நெல்லையில் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள பெட்ரோல் பல்க் முன்பு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மத்திய அரசை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் சங்கர பாண்டியன் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸார் கொரோனா பாதுகாப்பு உடை அணிந்தும, இருசக்கர வாகனத்திற்கு மாலை அணிவித்தும் வினோதமான போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியினர் மத்திய மோடி அரசு கண்டித்தும், பெட்ரோல் டீசல் விலை உயர்வை உடனே கட்டுப்படுத்த கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் உட்பட காங்கிரஸ் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu