/* */

நெல்லையில் கள்ளநோட்டு மாற்ற முயன்ற இளைஞர் கைது

நெல்லை பாளையங்கோட்டை கேடிசி நகர் பகுதியில் ஸ்டேஸ்னரி கடையில் 500 ரூபாய் கள்ள நோட்டை மாற்ற முயன்ற இளைஞரை கடை உரிமையாளர் போலீசாரிடம் பிடித்து ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

நெல்லையில் கள்ளநோட்டு மாற்ற முயன்ற இளைஞர் கைது
X

நெல்லை பாளையங்கோட்டை கேடிசி நகர் பகுதியில் ஸ்டேஸ்னரி கடையில் 500 ரூபாய் கள்ள நோட்டை மாற்ற முயன்ற இளைஞரை கடை உரிமையாளர் போலீசாரிடம் பிடித்து ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை பாளையங்கோட்டை கேட்டை கேடிசி நகர் பகுதியில் உள்ள பாரதிநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் கேடிசி நகர் 7-வது தெருவில் ஸ்டேஸ்னரி கடை நடத்தி வருகிறார் .

இவரது கடைக்கு கடந்த நான்கு தினங்களுக்கு முன் ஒருநபர் 500 ரூபாய் நோட்டை கொடுத்து செல்போனுக்கு 300 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து சென்றுள்ளார. இந்நிலையில் வங்கியிலல் பணம் செலுத்துவதற்காக ஆறுமுகம் சென்ற போது வங்கியில் அவர் கொடுத்த அந்த 500 ரூபாய் கள்ள நோட்டு என்று கூறி வாங்க மறுத்துவிட்டர் .

மேலும் அவர்கள் அந்த நோட்டில் அடையாளமிட்டு, அந்த பணத்தில் உள்ள எண்ணையும் குறித்து கொடுத்து இதுபோன்ற எண்ணில் யாரும் பணம் கொடுத்தால் அது கள்ள நோட்டு என்று தெரிவித்துள்ளனர்

அந்த பணத்தையும் கையில் கொடுத்துள்ளனர் . இதனையடுத்து அவர் தினமும் தனது கடைக்கு வரும் 500 ரூபாய் நோட்டுக்களை பரிசோதித்தே வாங்கி வந்தார் . இந்நிலையில் நேற்று மாலை ஒரு இளைஞர் 500 ரூபாய் நோட்டைக் கொடுத்து செல்போன் ரீசார்ஜ் செய்ய வேண்டும் என கூறியுள்ளார் .

அவர் அந்த நோட்டை வாங்கி பார்த்த போது அது போலியான எண்கொண்ட கள்ள நோட்டு என்பது தெரியவந்தது. இதனையடுத்து அந்த இளைஞரை பிடித்து கடையில் உட்கார வைத்து தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.

தகவல் அறிந்து வந்த போலீசார் அவரை பிடித்து விசாரித்ததில் அந்த இளைஞர் பெயர் ஆரிப்கான் , திருச்சியைச் சேர்ந்தவர் என்பதும் , அவர் டிரம்செட் அடிக்கும் கலைஞர் என்பதும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் அவரிடம் , இந்த பணத்தை கொடுத்தது யார் , அல்லது கள்ள நோட்டு கும்பல் இங்கு முகாமிட்டுள்ளதா, முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு உள்ளதா என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் .

Updated On: 24 May 2021 4:00 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...