/* */

இளைஞர்களிடம் விளையாட்டை ஊக்குவிக்கும் விதத்தில் நெல்லையில் விளையாட்டு போட்டிகள்

நெல்லை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இளைஞர்களுக்கு விளையாட்டுகளை ஊக்கப்படுத்தும் விதமாக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

HIGHLIGHTS

இளைஞர்களிடம் விளையாட்டை ஊக்குவிக்கும் விதத்தில் நெல்லையில் விளையாட்டு போட்டிகள்
X

இளைஞர்களிடம் விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டு போட்டி திருநெல்வேலி சட்ட மன்ற உறுப்பினர்  நயினார்நாகேந்திரன் தொடங்கி வைத்தார். 

நெல்லை சட்டமன்றத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள இளைஞர்களிடம் விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டு போட்டி திருநெல்வேலி சட்ட மன்ற உறுப்பினர் தொடங்கி வைத்தார்.

நெல்லை சட்டமன்றத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள இளைஞர்களிடம் விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் நெல்லை சட்டமன்றத்திற்கு உட்பட்ட 15 இடங்களில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களை கொண்டு பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இதில் ஆண்கள், பெண்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், கைப்பந்து மற்றும் தடகளப் போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு சான்றிதழ் வழங்குவதோடு பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.

பின்னர் இந்த விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் கூறியதாவது:

திருநெல்வேலி சட்டமன்ற தொகுதிக்குள் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் விளையாட்டு துறையில் அதிகமாக ஈடுபடுத்தி ஊக்குவிக்க வேண்டும் என்ற அடிப்படையில் 15 இடங்களில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தினோம். இதில் 10,000 பேர் வரை கலந்து கொண்டார்கள். அதில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழும் பரிசும் வழங்குகிறோம். 15 இடங்களில் இருந்து ஆட்களை தேர்வு செய்து இன்று முதல்முறையாக போட்டிகள் நடத்தி வருகிறோம். வரும் நாட்களில் மாவட்ட அளவில் விளையாட்டு வீரர்களில் தேர்ந்தெடுக்கும் ஒரு களமாக இது அமைக்கப்படும் என நயினார்நாகேந்திரன் தெரிவித்தார்.

பாளையங்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப், திருநெல்வேலி மாநகராட்சி மேயர் சரவணன். துணை மேயர் ராஜு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 20 March 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்