/* */

ரம்ஜான் பண்டிகை மேலப்பாளையம் மசூதிகளில் நடைபெற்ற சிறப்பு தொழுகை

திருநெல்வேலி மேலப்பாளையத்தில் ரம்ஜான் பண்டிகையையொட்டி நடைபெற்ற சிறப்பு தொழுகையில் பாளையங்கோட்டை எம்எல்ஏ அப்துல் வகாப், எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் முபாரக் கலந்து கொண்டு சிறப்பு தொழுகை நடத்தினர்.

HIGHLIGHTS

ரம்ஜான் பண்டிகை மேலப்பாளையம் மசூதிகளில் நடைபெற்ற சிறப்பு தொழுகை
X

நெல்லையில் ரம்ஜான் பண்டிகை களை கட்டியது. மேலப்பாளையம் மசூதிகளில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் திமுக எம்எல்ஏ அப்துல் வகாப், எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் முபாரக் பங்கேற்றனர்.

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பிருந்து தொழுகையில் ஈடுபடுவார்கள். இந்த ஆண்டும் தொடர் நோன்புக்கு பிறகு இஸ்லாமியர்கள் இன்று ரம்ஜான் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் நெல்லை மாவட்டத்தில் மாநகரம் முழுவதும் உள்ள மசூதிகளில் ரம்ஜான் பண்டிகை களைகட்டியுள்ளது. ரம்ஜானையொட்டி காலை முதல் ஆங்காங்கே உள்ள மசூதிகளில் நடைபெறும் இஸ்லாமியர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

மேலப்பாளையம், ரெட்டையார்பட்டி சாலையில் அமைந்துள்ள மசூதியில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கலந்து கொண்டார். அதேபோல் மேலப்பாளையம் குறிச்சி சாலையில் அமைந்துள்ள மசூதியில் நடைபெற்று வரும் சிறப்பு தொழுகையில் நெல்லை மத்திய மாவட்ட திமுக செயலாளரும், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான அப்துல்வகாப் பங்கேற்றார்.

தொழுகைக்குப் பின்பு ஒவ்வொருவரும் ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக் கொண்டனர். ரம்ஜான் பண்டிகையையொட்டி இளைஞர்கள், சிறுவர்கள் புத்தாடை அணிந்தபடியும், உறவினர்களை உபசரித்தும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

தொடர்ந்து பண்டிகையின் முக்கிய நோக்கமான ஏழை, எளிய மக்களுக்கு உணவு அளித்தும், உறவினர்களுடன் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டும் நாள் முழுவதும் ரம்ஜானை கொண்டாட உள்ளனர்.

Updated On: 3 May 2022 4:01 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு