நெல்லையில் என்சிசி மாணவர்களுக்கான துப்பாக்கி சுடும் பயிற்சி

பாளையங்கோட்டை ஜான்ஸ் பள்ளி மைதானத்தில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் பயிற்சியில் பங்கேற்ற என்சிசி மாணவ- மாணவிகள்.
நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை ஜான்ஸ் பள்ளி மைதானத்தில் என்சிசி மாணவர்களுக்கான பல்வேறு பயிற்சி நடைபெற்றது. இதில் மாவட்டத்திலுள்ள 50க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
கடந்த 20ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரை இந்த பயிற்சி நடைபெறுகிறது. இன்று பாளையங்கோட்டை ஜான்ஸ் பள்ளியில் வைத்து நடைபெற்றது. இந்த பயிற்சியில் மாணவர்களுக்கு துப்பாக்கி சுடுதல், வெடி பொருட்களை கையாளுதல், மார்ச் பாஸ், நடைபயிற்சி, தனி ஒழுக்கப் பயிற்சி என பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டன.
இந்த பயிற்சியினை என்சிசி கமாண்டர் லெப்டிணட் கர்னல் பாபி ஜோசப் வழங்கினார். மேலும் ராணுவ அதிகாரிகள் நிதீஸ் குமார் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். இதில் சிறப்பாக பயிற்சி மேற்கொள்ளும் மாணவ- மாணவிகள் டெல்லியில் நடைபெறும். இது போன்ற சிறப்பு பயிற்சிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று கமாண்டர் பாபி ஜோசப் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu