Begin typing your search above and press return to search.
இணையவழி கைவினைப் பயிற்சி
நெல்லை அரசு அருங்காட்சியகம் மற்றும் NPNK கலை பண்பாடு மன்றம் இணைந்து நடத்திய இணையவழி கைவினைப் பயிற்சி இன்று நடைபெற்றது
HIGHLIGHTS
நெல்லை அரசு அருங்காட்சியகம் மற்றும் NPNK கலை பண்பாடு மன்றம் இணைந்து நடத்திய இணையவழி கைவினைப் பயிற்சி இன்று நடைபெற்றது. இன்று நடைபெற்ற பயிற்சியில் வண்ண காகிதங்கள் கொண்டு அழகிய உருவங்கள் தயாரிக்கும் ஓரிகாமி பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சி மாவட்டக் காப்பாட்சியர் துவங்கி வைத்தார்.
இப்பயிற்சியினை மதுரை மாவட்ட கைவினை பயிற்சி ஆசிரியர் உமாமுத்து குமரன் நடத்தினார். இப்பயிற்சியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பள்ளி மாணவ மாணவியர் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
NPNK கலை பண்பாடு மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் வெங்கட்ராமன் நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்து நடத்தினார்.