/* */

மத்திய அரசு கொங்கு நாட்டை பிரிக்க வேண்டும் என நினைக்கவில்லை :பாஜக மாநிலத் துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் கருத்து

நெல்லை:வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த நாள். பாஜக மாநிலத் துணைத் தலைவர் மாலை அணிவித்து மரியாதை.

HIGHLIGHTS

மத்திய அரசு கொங்கு நாட்டை பிரிக்க வேண்டும் என நினைக்கவில்லை :பாஜக மாநிலத் துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் கருத்து
X

கொங்கு நாட்டைப் பிரிக்க வேண்டும் என்று மத்திய அரசு நினைக்கவில்லை என்றார் பாரதிய ஜனதா கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன்.

நெல்லையில் சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் பிறந்த நாளையொட்டி நெல்லை பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் உள்ள வீரன் அழகுமுத்துகோன் உருவச் சிலைக் குமாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: நெல்லை அருகே வல்லநாடு, தேனி அருகே வருசைநாடு போல நாடு என்ற பெயர் கொண்டு பல ஊர்கள் உள்ளது. அதனை எல்லாம் மாநிலமாக பிரிக்கமுடியுமா என கேள்வி எழுப்பிய அவர் எதிர்கட்சியினருக்கு கொங்கு நாடு என்றால் பயம் எதற்கு வருகிறது. அந்த பயம் தேவையில்லை. அனைத்து பகுதியும் தமிழ்நாடு தான்.

ஆந்திரம்,உத்திரபிரதேசம் போன்ற மாநிலங்கள் இரண்டாக பிரிந்துள்ளது. அந்த மாநிலங்கள் இரண்டாக பிரிக்கப்பட்டது மக்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. அதை போல தமிழகம் இரண்டாக பிரிக்க வேண்டும் எனபது மக்களின் எதிர்பார்ப்பாக இருந்தால் அதனை செய்ய வேண்டியது அரசின் கடமை. மத்திய அரசு கொங்கு நாட்டை பிரிக்க வேண்டும் என நினைக்கவில்லை. மத்திய அரசை ஒன்றிய அரசு என எதிர்கட்சியினர் தான் சொல்கிறார்கள். குறுகிய கண்ணோட்டத்தோடு எதனையும் பார்க்க வேண்டாம் என்றார் நயினார்நாகேந்திரன்

Updated On: 11 July 2021 1:39 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  2. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  3. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  4. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  5. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  6. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  8. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  9. திருப்பரங்குன்றம்
    கூடலகப் பெருமாள் கோயில், வைகாசிப் பெருந் திருவிழா!
  10. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...