/* */

பெண் காவலர் படுகொலையை கண்டித்து நெல்லை தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம்

டெல்லியில் பெண் காவலர் பாலியல் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து மேலப்பாளையத்தில் தவ்ஹீத் ஜமா அத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

பெண் காவலர் படுகொலையை கண்டித்து நெல்லை தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம்
X

நெல்லை அருகே டெல்லி பெண் போலீஸ் படுகொலையை கண்டித்து தவ்ஹீத் ஜமா அத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் சார்பில் டெல்லியில் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட பெண் காவலர் சபியா படுகொலைக்கு நீதி கேட்டும், குற்றவாளிகளை கைது செய்யாத மத்திய பாஜக அரசை கண்டித்தும், தலைநகர் டெல்லியில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதை கண்டித்தும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய நெல்லை மேலப்பாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மசூத் உஸ்மானி தலைமை வகித்தார். மாநில செயலாளர் செங்கோட்டை பைசல் கண்டன உரையாற்றி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய பாஜக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் சுலைமான், செய்யதலி, நெல்லை யூசுப் அலி, அன்சாரி மற்றும் பெண்கள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 9 Sep 2021 2:40 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மா அப்பாவுக்கு திருமண நாள் வாழ்த்து கவிதைகள்
  2. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 92.58 சதவீதம் மாணவர்கள்...
  3. சோழவந்தான்
    உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் சோழவந்தானில் யாகம்..!
  4. திருத்தணி
    சரக்கு வாகன ஓட்டுனரை வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது
  5. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதியம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண விழா..!
  6. நத்தம்
    நத்தம் பகவதி அம்மன் திருவிழா: காப்புக்கட்டுடன் தொடங்கியது..!
  7. கோவை மாநகர்
    காந்திபுரத்தில் பேருந்து மோதி தொழிலாளி பலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    எனக்கு தாலாட்டு பாடிய 'இரண்டாம் தாய்' அக்காவுக்கு பிறந்தநாள்...
  9. லைஃப்ஸ்டைல்
    ஆசையுடன் அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  10. வீடியோ
    Bhagyaraj மருமகளுடன் குத்தாட்டம் போட்ட Gayathri Raghuram ! #dance...