நெல்லை அருகே வயல் வெளியில் திடீரென பற்றிய தீயை தீயணைப்பு துறையினர் அணைத்தனர்
நெல்லை வயல் பகுதியில் திடீரென பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் அரை மணி நேரம் போராடி அணைத்தனர்.
நெல்லை ஸ்ரீபுரம் பி.எஸ்.என்.எல் அலுவலகத்தின் பின்புறம் அமைந்துள்ள வயல்வெளியில் இன்று இரவு திடீரென தீப்பிடித்து எரிந்த்தை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக பாளையங்கோட்டை தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்த மரம் மற்றும் காய்ந்த செடிகளில் தீ மளமளவென பற்றி எரிந்தது. இதனால் ஏற்பட்ட கடும்புகை மூட்டம் அருகில் இருந்த பி.எஸ்.என்.எல் அலுவலக குடியிருப்பு பகுதிக்குள் சூழ்ந்ததால் அங்கிருந்த பொதுமக்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சிரமப்பட்டனர். பின்னர், பாளையங்கோட்டை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில், அரசு மரம் உள்பட இரண்டு மரங்கள் முற்றிலும் தீயில் கருகி நாசமானது. இதுகுறித்து நெல்லை சந்திப்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்து ஏற்பட்ட வயல் பகுதியில் விவசாய பயிர்கள் பயிரிடப்படாமல் செடி கொடிகள் காய்ந்த நிலையில் இருந்தது எனவே யாரேனும் புகை பிடித்ததன் மூலம் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது மர்மநபர்கள் வேண்டுமென்றே தீ பற்ற வைத்தார்களா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu