/* */

தீயணைப்புத்துறை சார்பில் தேசிய தீயணைப்பு நாள்

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியின்போது உயிர்நீத்த வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் தேசிய தீயணைப்பு நாள் நிகழ்ச்சி

HIGHLIGHTS

தீயணைப்புத்துறை சார்பில் தேசிய தீயணைப்பு நாள்
X

1944 ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற வெடி விபத்தில் பலியான தீயணைப்புப் படை வீரர்களின் நினைவாக இந்த தேசிய தீயணைப்பு நாள் நிகழ்ச்சி மத்திய அரசு மூலம் கடைபிடிக்கப்படுகிறது.

திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் அலுவலர் சத்திய குமார் தலைமையில், பணியின்போது உயிர்நீத்த 33 தீயணைப்பு வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து பாளையங்கோட்டை நிலையத்திலுள்ள 48 ஊழியர்களும் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட தீயணைப்பு அலுவலர் சத்திய குமார், பணியின் போது உயிர்நீத்த வீரர்களின் நினைவாக கடைபிடிக்கப்படும் இந்த நினைவு நாள் நிகழ்ச்சியில், மரணமடைந்த வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்படுகிறது. இதனை கடைப்பிடிக்கும் விதமாக ஒரு வார காலத்திற்கு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் சார்பில் உயிர் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டம் முழுவதும் நடத்தப்படும். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 7 தீயணைப்பு நிலையங்களிலும் மற்றும் கொரோனா பரவி வரும் இந்த காலகட்டத்தில் மருத்துவமனைகளில் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மருத்துவமனைகளிலும் உயிர் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படும் என தெரிவித்தார்.


Updated On: 14 April 2021 5:59 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  2. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. நாமக்கல்
    கொல்லிமலையில் 13 செல்போன் டவர்களை செயல்படுத்த பாஜ. கோரிக்கை
  9. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
  10. ஈரோடு
    ஆப்பக்கூடலில் 14 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்