/* */

நெல்லை-ஆடிசுவாதியை முன்னிட்டு கருடாழ்வாருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது

ஆடிசுவாதியில் கருடனை வழிபடுவதாலும் சகல தோஷங்களும் நீங்கும். மாங்கல்யம் பலம் பெறும். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

HIGHLIGHTS

நெல்லை-ஆடிசுவாதியை முன்னிட்டு கருடாழ்வாருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது
X

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை இராஜ கோபால சுவாமி கோவிலில் ஆடிசுவாதியை முன்னிட்டு கருடாழ்வாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.

பெரிய திருவடி என வைணவர்களால் போற்றப்படும் கருடாழ்வார் - பட்சிராஜா் பிறந்தது ஆடி மாதம் ஸ்வாதி நக்ஷத்திரம். இந்தத் திருநாளில் கருட தரிசனம் செய்வதாலும், கருடனை வழிபடுவதாலும் சகல தோஷங்களும் நீங்கும். மாங்கல்யம் பலம் பெறும். பட்சிராஜா் ஆழ்வார்களில் பெரியாழ்வாராக அவதரித்தார்.

சிறப்பு வாய்ந்த கருடாழ்வாருக்கு பெருமாள் திருக்கோவில்களில் ஈசான மூலையில் மதில்சுவற்றில் சன்னதி அமைந்துள்ளது. திருஆடி சுவாதியை முன்னிட்டு வைணவ திருத்தலங்கள் அனைத்திலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

அதன் ஒரு நிகழ்வாக பாளையங்கோட்டை அருள்மிகு ராஜகோபால சுவாமி திருக்கோவிலில் வடக்கு மதில் சுவா் மேல் அமைந்துள்ள கருடாழ்வாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. முன்னதாக கோயில் உள் கருடன் முன் கும்பங்கள் வைத்து பூஜைகள் நடைபெற்றது. தொடா்ந்து வெளி கருடாழ்வாருக்கு மாபொடி, மஞ்சள்பொடி, திரவிய பொடி, பால், தயிா், பஞ்சாமிருதம், தேன், இளநீா், சந்தணம் கொண்டு சிறப்பாக திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னா் கருடாழ்வாருக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்று கற்பூரு ஆரத்தி காண்பிக்கப்பட்து. பக்கதா்கள் தங்கள் வேண்டுதல்களுக்காக கருடாழ்வாருக்கு தேங்காய் விடல் போட்டு வேண்டுதலை நிறைவேற்றினா். ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு கருடாழ்வாரை தாிசனம் செய்தனா். கொரோனா காரணமாக பக்தா்கள் ஆலயத்திற்குள் அனுமதி இல்லை.

Updated On: 14 Aug 2021 5:12 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?
  2. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  7. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  8. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  9. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  10. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு