/* */

இலவச வீட்டுமனை பட்டா- வேட்பாளர் உறுதி

இலவச வீட்டுமனை பட்டா- வேட்பாளர் உறுதி
X

பாளையங்கோட்டை தொகுதியில் வீடு இல்லாத மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்குவேன் என எஸ்.டி.பி.ஐ கட்சி வேட்பாளர் முகம்மது முபாரக் வாக்குறுதி அளித்தார்.

எஸ்.டி.பி.ஐ கட்சி பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் முகம்மது முபாரக் குக்கர் சின்னத்திற்கு ஆதரவு தர வேண்டி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். பாளையங்கோட்டை பகுதிகளுக்கு உட்பட்ட ஏ.ஆர் லைன், தியாகராஜா நகர், மகாராஜா நகர், இலந்தை குளம், தெற்கு பஜார் உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக குக்கர் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டி பிரச்சாரம் மேற்கொண்டார்.இதில் உழவர் சந்தை அருகே பேசிய அவர் தியாகராஜ நகர் மேம்பால பணிகள் இரண்டு ஆண்டுகளாக கிடப்பில் போடபட்டுள்ளதால் இங்குள்ள பொதுமக்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கபட்டுள்ளனர்.இதனால் தேவையற்ற போக்குவரத்து நெருக்கடிகளும் விபத்துகளும் ஏற்படுகிறது என கூறினார்.

மேலும் மாநகராட்சி பகுதிகளில் அடிப்படை தேவைகளான சாலை வசதி,தூய்மையான குடிநீர்,கழிவு நீர் ஓடை, மின்விளக்கு என அனைத்தும் முற்றிலுமாக புறக்கணிக்கபட்ட பகுதியாக உள்ள இப்பகுதியை தான் எம்எல்ஏ.,வாக தேர்ந்தெடுக்கபட்டால் அடிப்படை தேவைகளை சீர் செய்து இங்கு இலவச வீட்டு மனை பட்டா கேட்டு போராடி வரும் மக்களுக்கு உடனடியாக கிடைக்க ஏற்பாடு செய்வேன் என கூறினார்.

Updated On: 30 March 2021 6:48 AM GMT

Related News

Latest News

  1. பொன்னேரி
    பொன்னேரி அருகே அம்மன் கோவில் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை
  2. கும்மிடிப்பூண்டி
    பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த மூன்று பேர் கைது
  3. அரசியல்
    பா.ஜ.க அழுத்தம் கொடுத்தும் ராஜினாமா செய்யாதது ஏன்? கெஜ்ரிவால்
  4. தேனி
    தேனியில் ஆட்டு இறைச்சி விலை கிடுகிடு உயர்வு!
  5. தேனி
    ஐந்து நாள் மழை பெய்தும் அணைகளுக்கு நீர் வரத்து இல்லை
  6. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 33 கன அடி அதிகரிப்பு
  7. ஈரோடு
    பவானிசாகர் அணை நீர்மட்டம் 44.50 அடியாக சரிவு
  8. காஞ்சிபுரம்
    கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ள வங்கி ஊழியர்..
  9. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் பகுதியில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்