/* */

நகராட்சி, மாநகராட்சி பணியாளர்களின் குழந்தைகளுக்கு பரிசளிப்பு

நகராட்சி, மாநகராட்சி பணியாளர்களின் குழந்தைகளுக்கு மாநகராட்சி ஆணையர் விஷ்ணு சந்திரன் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

HIGHLIGHTS

நகராட்சி, மாநகராட்சி பணியாளர்களின் குழந்தைகளுக்கு பரிசளிப்பு
X

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணுசந்திரன் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டுத் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் உள்ள நகராட்சி மற்றும் மாநகராட்சி பணியாளர்களுக்கு என தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி பணியாளர்களின் குரல் என்ற மாத இதழ் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாத இதழின் பதிப்பாளர் ஆசிரியராக நகராட்சி மற்றும் மாநகராட்சி கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளரான திருநெல்வேலியை சார்ந்த இரா. சீத்தாராமன் உள்ளார். இந்த மாத இதழின் சார்பாக 10 மற்றும் +2 வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் பெறுகின்ற நகராட்சி மற்றும் மாநகராட்சி பணியாளர்களின் குழந்தைகளுக்கு பரிசளித்து பாராட்டி வருகிறன்றனர்.

கடந்த 11 ஆண்டுகளாக இத்தகைய விழா தமிழ்நாட்டின் பல பகுதிகளில் நடைபெற்று வந்துள்ளது. இந்த ஆண்டு இந்த விழா திருநெல்வேலியில் பாளையங்கோட்டை மாநகராட்சி திருமண மண்டபத்தில் மாநகராட்சி கூட்டமைப்பின் தலைவர் வி.ராதாகிருஷ்ணன், நகராட்சி கூட்டமைப்பின் தலைவர் பாலசந்தர் ஆகியோரது தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் +2 வகுப்பில் மாநில அளவிலான மாநகராட்சி பணியாளர்களின் குழந்தைகள் திருநெல்வேலி மாநகராட்சி சுகாதார அலுவலர் சாகுல் கமீது மகன் செல்வன் முகம்மது யாசர் மைதீன் முதல் பரிசும், திருநெல்வேலி மாநகராட்சி இளநிலை உதவியாளர் கண்ணன் மகன் கார்த்திக் ராஜ் 2-வது பரிசும் வழங்கப்பட்டது.

நகராட்சி பணியாளர்களின் குழந்தைகளின் கூத்தாநல்லூர் நகராட்சி தாமோதரன் லாவண்யா முதல் பரிசினையும், நாமக்கல் நகராட்சி சுகவனம் புதல்வி சாதனா 2-வது பரிசினையும், சிபிஎஸ்சி தேர்வில் தஞ்சாவூர் மாநகராட்சி சங்கரவடிவேலு புதல்வன் செல்வன் சுபனேஷ் முதல் பரிசினையும், நாகர்கோவில் மாநகராட்சி துர்காதேவி புதல்விபெமிலா ரோகிணி 2-வது பரிசினையும் பெற்றார்கள். இவர்களுக்கு திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணுசந்திரன் பரிசுகளை வழங்கி பாராட்டுத் தெரிவித்தார்.

திருநெல்வேலி மாநகராட்சி கூட்டமைப்பு தலைவர் பிலிப் அந்தோணி நன்றி கூறினார்.

Updated On: 25 Sep 2021 11:21 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  2. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு
  3. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை
  4. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால்...
  5. திருப்பூர்
    வெயில் நேரத்தில் வெளியே போகாதீங்க; திருப்பூர் கலெக்டர் அட்வைஸ்!
  6. கீழ்பெண்ணாத்தூர்‎
    தண்ணீர் பந்தலை திறந்து வைத்த துணை சபாநாயகர்
  7. ஈரோடு
    ஈரோடு ஸ்ரீ சக்தி அபிராமி தியேட்டரில் கணபதி யாகம்
  8. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
  9. ஆன்மீகம்
    குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்
  10. திருவண்ணாமலை
    தபால் வாக்கு சீட்டுகளை பாதுகாப்பாக கையாள ஆட்சியர் அறிவுரை