/* */

நெல்லையில் ஷவர்மா கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை

நெல்லையில் உள்ள ஷவர்மா கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

HIGHLIGHTS

நெல்லையில் ஷவர்மா கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை
X

நெல்லை மாநகர பகுதிகளில் ஷவர்மா கடைகளில் மாவட்ட நியமன அலுவலர் மற்றும் மருந்து நிர்வாகத்துறை அதிகாரி சசி தீபா மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். 

கேரள மாநிலம் காசர்கோடு அருகே ஷவர்மா சாப்பிட்டதால் ஏற்பட்ட உயிரிழப்பை தொடர்ந்து, நெல்லை மாநகர பகுதிகளில் சவர்மா கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். பாளையங்கோட்டை வ.உ.சி. திடலில் மாவட்ட நியமன அலுவலர் மற்றும் மருந்து நிர்வாக துறை அதிகாரி சசி தீபா மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அப்போது அங்குள்ள கடைகளில் தேதி குறிப்பிடப்படாமல் வைக்கப்பட்டிருந்த பொருட்களை குறித்து கேட்டறிந்த மாவட்ட நியமன அலுவலர் சசி தீபா, ஷவர்மா வைக்கப்பட்டிருந்த கடைகளில் உள்ள இறைச்சியையும், அவைகளுக்கான மூலப்பொருட்களின் வாங்கிய தேதி உள்ளிட்டவைகள் அச்சிடப்பட்டு இருக்க வேண்டும் என எச்சரித்தார்.

தொடர்ந்து அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த கோழி இறைச்சி கருகி இருந்ததைக் கண்டு அவர் அதை அப்புறப்படுத்தம் வகையில் அங்கிருந்து எடுத்து அருகில் உள்ள கழிவு நீர் ஓடையில் கொட்டினார். அவர் கூறுகையில், தமிழகம் முழுவதும் இந்த சோதனை தற்போது நடைபெறுவதாகவும், நெல்லை மாவட்டத்தை பொருத்தவரை 30 முதல் 40 கடைகள் அனுமதி பெற்றுள்ள தெருவோர வியாபாரிகள் அதிக அளவில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

Updated On: 6 May 2022 12:15 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...