கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பல் மருத்துவர் கைது

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பல் மருத்துவர் கைது
X

மருத்துவர் சுகுமாரின் பல்மருத்துவமனை

நெல்லையில் பயிற்சிக்கு வந்த மாணவிக்கு பல் மருத்துவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை பாளையங்கோட்டை சமாதானபுரம் பகுதியில் தனியார் பல் மருத்துவமனை நடத்தி வருபவர் சுகுமார். மானூரை சேர்ந்த நர்சிங் மாணவி ஒருவர் சுகுமாரின் மருத்துவமனையில் செய்முறை பயிற்சி பயின்று வந்த நிலையில், மருத்துவர் சுகுமார் அம்மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளதாக தெரிகிறது.

மாணவி அவரை கண்டிக்கவே விஷயத்தை வெளியே சொல்லக் கூடாது என மிரட்டியுள்ளார். இந்த நிலையில் மாணவி தனக்கு நேர்ந்த கொடுமையை வீட்டில் சொல்லியதால், அவரது பெற்றோர்கள் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் மருத்துவர் சுகுமார் மீது புகார் அளித்தனர்.

அதன்பேரில் போலீசார் சுகுமார் மீது பாலியல் வன்கொடுமை பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து சுகுமாரை தேடி வந்தனர். இதற்கிடையில் தகவல் அறிந்த மருத்துவர் சுகுமார் மருத்துவமனையை மூடி விட்டு தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், பாளையங்கோட்டை தனிப்படை அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
AI மரங்களை நடவு செய்வதில் புரட்சி: சரியான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது?