நாட்டுப்புற கலைக் குழு மூலம் கொரோனா விழிப்புணர்வு பிரசாரம்: நெல்லை .ஆட்சியர் தொடக்கி வைத்தார்
கொரோனா 3 -ஆவது அலையின் தாக்கத்தை தவிர்க்கும் முன்னெச்சரிக்கை தொடர்பாக நாட்டுப்புறக்கலைஞர்கள் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளும் பணியை நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தொடங்கி வைத்தார்.
நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் உதவும் உள்ளங்கள் அமைப்பு இணைந்து கொரோனா நோய் பரவலின் மூன்றாவது அலையை தடுக்க கிராமங்கள் தோறும் விழிப்புணர்வை ஏற்படுத்த நாட்டுப்புற கலை குழு மூலம் நடத்தப்படும் பிரசாரத்தை நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு பறை இசைத்து தொடங்கி வைத்தார். பொய்க்கால் குதிரை, தப்பாட்டம் ,கரகாட்டம், உள்ளிட்ட நாட்டுப்புற இசை நிகழ்ச்சிகள் மூலம் தடுப்பு ஊசி செலுத்தி கொள்வது, சமூக இடைவெளி, முக கவசம் அணிவது தொடர்பான பிரசாரம் செய்யப்படும்.
பின்னர் செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு கூறியதாவது:
நெல்லை மாவட்டத்தில் கொரோனா நோய் பரவல் படிபடியாக குறைந்து தற்போது 1.2 சதவீதமாக உள்ளது. நெல்லை மாவட்டத்தில் 3 -ஆவது அலை வராமல் தடுக்க கிராமப்புற மக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா பரவலை தடுக்கவும், தடுப்பூசி செலுத்தி கொள்ளவும் மக்களிடத்தில் நாட்டுபுறகலைகள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட்டவருகிறது. நெல்லை மாவட்டத்தில் ரேண்டம் முறையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அதிகளவில் பாதிப்பானது இதுவரை மாவட்டத்தில் கண்டறியபடவில்லை என தெரிவித்தார்.
நெல்லை மாவட்டத்தில் மீண்டும் சோதனை சாவடிகள் அமைத்து கண்காணிக்க பட உள்ளன. நாளை முதல் நெல்லை மாவட்டத்திற்கு வரும் வெளியூர் மக்களை கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களை தீவிரமாக கண்காணிக்கவும் சுகாதாரத்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.கடந்த அலையை விட மருத்துவமனையில் அதிகளவு படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளது எனவும். மூன்றாவது அலையை கட்டுபடுத்த தனிக்கவனம் செலுத்தப்பட்டு வருகிறது..
கருப்பு பூஞ்சை நோய் பாதிக்கப்பட்டு நெல்லை மாவட்டத்தில் 10 பேர் சிகிச்சையில் உள்ளனர். நோய்க்கு தேவையான மருந்துகளும் கையிருப்பில் உள்ளதாகவும் ஆட்சியர் விஷ்ணு தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu