/* */

கொரோனா 3வது அலை தடுப்பு : செவிலியர், பயிற்சி மாணவிகளுக்கு பயிற்சி

அரசு மருத்துவமனையில் கொரோனா மூன்றாம் அலை தடுப்பு செயல் முறைகளை செவிலியர், பயிற்சி மாணவிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

கொரோனா 3வது அலை தடுப்பு :  செவிலியர், பயிற்சி மாணவிகளுக்கு பயிற்சி
X

கொரோனா பெருந்தொற்றின் மூன்றாவது அலையை தடுக்க தமிழக அரசு கொரோனா விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்க வலியுறுத்தி உள்ளது. இதையொட்டி திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவக் கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன் ஆலோசனைப்படி குழந்தைகள் நல மருத்துவ பிரிவு இணை பேராசிரியர் வெங்கட சுப்ரமணியன் மூன்றாம் அலை கொரோனா தடுப்பு செயல் முறைகளை செவிலியர், பயிற்சி மாணவிகளுக்கு விளக்கினார். வார்டுகளில் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்படும் குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களின் அச்சத்தை போக்கும் வகையில் விழிப்புணர்வு நலக்கல்வி எவ்வாறு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார். மேலும் தடுப்பூசி, முகக்கவசம், தனிமனித இடைவெளி, சானிடைஸர் போன்றவற்றின் அவசியம் குறித்தும் விளக்கினார்.

நிகழ்ச்சியில் குழந்தைகள் நல உதவி மருத்துவர் சங்கரலிங்கம் கலந்து கொண்டார். நிறைவாக செவிலியர் பயிற்சி பள்ளி முதல்வர் சாந்தி இருதயராஜ் தலைமையில் கொரோனா தடுப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

Updated On: 4 Aug 2021 1:58 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  3. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  4. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  6. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  7. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  9. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  10. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?