/* */

நெல்லை: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரசார் போராட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நெல்லையில் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

நெல்லை: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரசார் போராட்டம்
X
 நெல்லையில் நூதன போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர். 

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வ கண்டித்து காங்கிரஸ் கட்சி, இன்று நாடு தழுவிய போராட்டம் நடைபெற்றது. அவ்வகையில், திருநெல்வேலி காங்கிரஸ் கட்சி சார்பில் பாளையங்கோட்டை ஜோதிபுரத்தில் நூதன போராட்டம் நடைபெற்றது.

இருசக்கர வாகனம், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் உள்ளிட்டவைகளுக்கு மாலை அணிவித்து மணியடித்து, ஒப்பாரி வைத்து விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்த நூதனப் போராட்டம் நடைபெற்றது. தொடர்ந்து விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் இந்த போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் மாநகர் மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன் மற்றும் டியூக் துரைராஜ், கண்ணன், ராஜேஷ்முருகன், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 31 March 2022 7:30 AM GMT

Related News

Latest News

  1. செய்யாறு
    செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு...
  2. திருவண்ணாமலை
    கார் விபத்தில் சிக்கிய அமைச்சரின் மகன்: போலீசார் விசாரணை
  3. நாமக்கல்
    நாமக்கல்லில் இன்னுயிர் காப்போம் திட்டம்: 6,568 பேருக்கு ரூ. 4.73 கோடி...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  8. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  9. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  10. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...