திருநெல்வேலியில் பக்ரீத் பெருநாளை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடத்தினர்.
திருநெல்வேலி மேலப்பாளையத்தில் பக்ரீத் பெருநாளை முன்னிட்டு அனைத்து மசூதிகளிலும் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது
உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் இன்று பக்ரீத் திருநாளை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். ஈகை திருநாள் என்றழைக்கப்படும் பக்ரீத் பண்டிகை இஸ்லாமியர்களின் முக்கிய திருநாளாக இருந்து வருகிறது. இறைவனின் தூதரான இப்ராகிம் நபிகளாரின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் இஸ்லாமியர்கள் இந்த பக்ரீத் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் நெல்லை மாவட்டத்தில் இன்று இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அந்தந்த பகுதிகளில் உள்ள மசூதிகளில் சிறப்பு தொழுகை நடத்தி வழிபட்டனர். குறிப்பாக நெல்லை மேலப்பாளையம் பகுதியில் அதிகளவு இஸ்லாமியர்கள் வசித்து வருகின்றனர்.
இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக பொது மைதானங்களில் தொழுகை நடத்த அரசு அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து மேலப்பாளையம் பகுதியில் உள்ள அனைத்து மசூதிகள், மசூதிகள் முன்பும் அமர்ந்து அந்தந்த பகுதியை சேர்ந்த இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக் கொண்டனர் தொழுகைக்கு பின் அனைவரும் வீடுகளில் அசைவ உணவுகளை சமைத்து பிறருக்கும் பகிர்ந்து பக்ரீத் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu