/* */

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் தான் கூட்டணி: நெல்லையில் புரட்சி பாரதம் கட்சி தலைவர் பேட்டி

அனைத்து சாதியினரும் அரச்சகர் ஆவதை நாங்கள் வரவேற்கிறோம் நெல்லையில் புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி பேட்டி

HIGHLIGHTS

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் தான் கூட்டணி:  நெல்லையில் புரட்சி பாரதம் கட்சி தலைவர் பேட்டி
X

நெல்லையில் புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி இன்று நெல்லை வந்தார். முன்னதாக அவர் வண்ணாரப்பேட்டை தனியார் ஹோட்டலில் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தென் மாவட்டங்களில் புரட்சி பாரதம் இயக்கத்தைப் வலுப்படுத்தவும், பட்டியலின மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காகவும் வரும் 31ம் தேதி வரை தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளேன். தொடர்ச்சியாக கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளேன். நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொழில் பூங்காவை விரிவுபடுத்தி படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

இன்று களக்காட்டில் நடைபெறும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றுகிறோம். அதேபோல் தற்போது ஆட்சி செய்யும் திமுக அரசு நீர்வளங்களை பாதுகாக்க வேண்டும். தமிழ்நாட்டில் எஸ்சி எஸ்டி மாணவர்களின் கல்விக் கடனை அரசு ரத்து செய்ய வேண்டும். புதிய மாணவர்களுக்கு நிபந்தனையின்றி எளிய முறையில் கல்விக்கடன் வழங்க வேண்டும். திருநெல்வேலி மாநகராட்சியில் மேயர் பதவி தொடர்ந்து தலித் அல்லாதவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. எனவே சுழற்சி முறையில் பட்டியல் இனத்தவருக்கு ஒதுக்கப்பட வேண்டும். திமுக ஆட்சி அமைத்த 120 நாட்களில் அரசு நன்றாக தான் செயல்பட்டு வருகிறது.

ஆனால் இன்னும் நான்கரை ஆண்டுகள் ஆட்சி இருக்கிறது. அதற்குள் ஆட்சி நிலைமை எப்படி இருக்கும் திசை மாறி விடுமா என்ற சந்தேகம் எழுகிறது. ஏன் என்றால் கட்சித் தலைமை சரியாக இருந்தாலும், கீழ்மட்டத்தில் இருக்கின்ற மாவட்ட செயலாளர்கள் முடிசூடா மன்னர்கள் போல் மக்களை மதிக்காமல் தான்தோன்றித்தனமாக செயல்படுவதால் மக்களுக்கு ஒருவித எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக ஏற்கனவே கருணாநிதி முதல்வராக இருந்தபோது ஆணை பிறப்பித்தார். ஆனால் அரசு அலுவலர்கள் அந்த ஆணையை செயல்படுத்தாமல் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. தற்போது மீண்டும் ஆணை பிறப்பித்துள்ளார்கள். தற்போதுள்ள அரசு அலுவலர்கள் இந்த ஆணைக்கு கட்டுப்பட்டு ஆணையை நிறைவேற்றி உள்ளார்கள். உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் தான் கூட்டணி வைத்து போட்டியிடுவோம் என்று தெரிவித்தார்.

Updated On: 27 Aug 2021 1:24 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பொண்ணு மாப்பிள்ளையை வாழ்த்துவோம் வாங்க..!
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    முன்னாள் படைவீரர்களுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு
  3. திருப்பரங்குன்றம்
    மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் பலத்த மழை: கொடைக்கானலில், படகு போட்டி...
  4. லைஃப்ஸ்டைல்
    'ஓருயிராய் வாழ்வோம் வா'..என அழைக்கும் திருமண வாழ்த்து..!
  5. ஆன்மீகம்
    வரும் வியாழன் அன்று வைகாசி விசாகம்; தமிழ் கடவுள் முருகனை வழிபடுங்க..!
  6. உலகம்
    சீனாவில் பள்ளிக்குள் புகுந்து குழந்தைகளை கத்தியால் குத்திய பெண்
  7. லைஃப்ஸ்டைல்
    உங்கள் பெயரின் முதல் எழுத்து ‘எஸ்’ என ஆரம்பிக்கிறதா? - ரொம்ப...
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    நூறு சதவீத கல்வி உதவி தொகையுடன் பட்டய படிப்பு குறித்த ஆலோசனை கூட்டம்
  9. ஈரோடு
    சித்தோடு அருகே அடுத்தடுத்து வந்த 3 கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி...
  10. லைஃப்ஸ்டைல்
    ரயில் பெட்டிகளில் வெள்ளை மற்றும் மஞ்சள் கோடுகள் இருப்பதை கவனித்து...