/* */

நெல்லை அருகே 140 கி குட்கா மூட்டைகள் பறிமுதல்: ஒருவர் கைது; போலீசார் அதிரடி

பாளையங்கோட்டையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 140 கிலோ குட்கா மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர்.

HIGHLIGHTS

நெல்லை அருகே 140 கி குட்கா மூட்டைகள் பறிமுதல்: ஒருவர் கைது; போலீசார் அதிரடி
X

குட்கா மூட்டைகளுடன் கைது செய்யப்பட்ட அலெக்சாண்டர்.

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை கேடிசி நகர் அருகே நெல்லை மாநகர தனிப்படை காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை போலீசார் சோதனை செய்தபோது அவரிடம் குட்கா மூட்டை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாளையங்கோட்டை பெருமாள்புரம் அருகே உள்ள ஐஆர்டி பாலிடெக்னிக் அருகே ஒரு குடோனில் குட்கா பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரிந்தது.

இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தபோது அங்கு 140 கிலோ எடை கொண்ட குட்கா மூட்டை, மூட்டையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து குட்கா பதுக்கி வைத்திருந்ததாக பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த அலெக்சாண்டர் என்பவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையர் சுரேஷ்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், நெல்லை மாநகர பகுதியில் கஞ்சா மற்றும் குட்கா விற்பனை செய்யப்படுவதை காவல்துறையின் மூலம் கண்காணிக்கப்படுகின்றன. இதன் மூலம் நெல்லை மாநகர பகுதியில் 140 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அலெக்சாண்டர் என்பவரை கைது செய்துள்ளோம். இவருடன் கூட்டாளியாக இருந்தவர் கடந்த வாரம் குட்கா விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தார்.

Updated On: 14 Sep 2021 7:47 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து உண்பதின் அவசியம் என்ன..?...
  2. லைஃப்ஸ்டைல்
    10 ஆண்டு திருமண நாள் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. லைஃப்ஸ்டைல்
    காதல் கிளியே காதல் கிளியே, உன்னை நான் காதலிக்கலையே...! - மறைமுக...
  4. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் முயல் வேட்டையாடிய 10 பேர் கைது ரூ.1 லட்சம் அபராதம்
  5. லைஃப்ஸ்டைல்
    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே - திருமண நாள் வாழ்த்துக்கள்
  6. திருவள்ளூர்
    ஆக்சிஜன் சிலிண்டருடன் மனு கொடுக்க வந்த நுரையீரல் பாதிக்கப்பட்ட நபர்
  7. கோவை மாநகர்
    கோவையில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு மர்ம நபர்கள் தீ...
  8. பொள்ளாச்சி
    ஆனைமலை ஆற்றில் கலக்கும் கழிவு நீருடன் மனு கொடுக்க வந்த சமூக ஆர்வலர்
  9. குமாரபாளையம்
    மதுக்கடை பார் ஊழியரை தாக்கியதாக அ.தி.மு.க. நகர செயலாளர் மீது புகார்
  10. ஈரோடு
    காலிங்கராயன்பாளையம் அனைத்து வணிகர்கள் சங்க பொதுக்குழு கூட்டம்