நெல்லை: போக்சோ வழக்கில் கைதானவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்
போக்சோ வழக்கின் குற்றவாளி, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
நெல்லை ஊரக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கில், பாளையங்கோட்டை, மேலப்பாட்டம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த குமார் என்பவரின் மகன் சிவா (23) போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். . இவர் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ஊரக அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ரசிதாவுக்கு அறிவுறுத்தினார்.
அதன்பேரில், குற்றவாளியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின் பேரில்,( 21.07.2021 ) இன்று குற்றவாளியை குண்டர் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu