நெல்லை- பதுக்கி வைக்கப்பட்டிருந்த 20 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்,
நெல்லையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 20 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய மூன்று பிக்கப் வேன்கள், ஆறு இரண்டு சக்கர வாகனங்களும் கைப்பற்றி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு விசாரணைநடத்தி வருகின்றனர்.
நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள தனியார் குடோனில் 20 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக பாளையங்கோட்டை போலீசாருக்கு தகவல் வந்தது.
அதன் அடிப்படையில் பாளையங்கோட்டை இன்ஸ்பெக்டர் தில்லை நடராஜன் சம்பவ இடத்திற்கு சென்று 20 டன ரேஷன் அரிசி மூட்டைகளை கைப்பற்றி உணவு தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்து அவர்களிடம் ஒப்படைத்தார்.
மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 3 பிக்கப் வேன் மற்றும் 6 பைக்குகள் கைப்பற்றப்பட்டுள்ளன. ரேஷன் அரிசி கடத்திய வர்கள் போலீசாரைக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர். அவர்கள் யாரென்று பாளையங்கோட்டை காவல் துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu