/* */

நெல்லை மரக்கடையில் தீ விபத்து

நெல்லை மரக்கடையில் திடீரென தீவிபத்து. இதில் இரு சக்கர வாகனங்கள் மற்றும் லட்சம் மதிப்புள்ள மரக்கட்டைகள் எரிந்தன.

HIGHLIGHTS

நெல்லை மரக்கடையில் தீ விபத்து
X

பாளையங்கோட்டை மரக் கடையில் நேரிட்ட தீ விபத்திவ் இரு சக்கர வாகனங்கள், மரங்கள் எரிந்து சேதமடைந்தன

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை சீவலப்பேரி சாலையில் உள்ள மரக்கடையில் இரவில் திடீரென தீ பிடித்துள்ளது. இதனை பார்த்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையத்தில் இருந்து இரண்டு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது தீ வேகமாக பரவியது. தீயணைப்பு படை வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் 3 இருசக்கர வாகனங்கள், 2 லட்ச ரூபாய் மதிப்பிலான மரக்கட்டைகள் எரிந்து நாசமானது. இதுதொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 3 July 2021 7:47 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  2. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  4. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  5. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  6. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  7. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  8. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  9. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  10. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!