/* */

எங்க ஊரு நிஜ ஹீரோ-ஓய்வு பெற்ற வேளாண் அதிகாரிதாங்க-பாளையங்கோட்டை பகுதி மக்கள் மகிழ்ச்சி

நெல்லையில் வீட்டு வேலை, முடிதிருத்தம், சலவைத் தொழிலாளர்களுக்கு தானாக முன்வந்து நிவாரண பொருள் வழங்கிய வேளாண்மை துறை அதிகாரி.

HIGHLIGHTS

எங்க ஊரு நிஜ ஹீரோ-ஓய்வு பெற்ற வேளாண் அதிகாரிதாங்க-பாளையங்கோட்டை பகுதி மக்கள் மகிழ்ச்சி
X

கொரோனா காலத்தில் தவிப்பவர்களுக்கு உதவும் வேளாண் அதிகாரி

கொரோனா காலத்தில் தவிக்கும் வீட்டு வேலை, முடிதிருத்தும், சலவை தொழிலாளர்களுக்கு ஓய்வு பெற்ற வேளாண்மை துறை அதிகாரி.தானாக முன்வந்து உதவி செய்து வருகிறார்

தற்போது கொரோனா இரண்டாவது அலை தாக்கம் உள்ளதால் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளதால் பலதரப்பட்ட மக்களும் பொருளாதார நிலையில் கடும் சிரமத்தில் உள்ளனர். இந்நிலையில் பாளையங்கோட்டை அருகே உள்ள கேடிசி நகரைச் சேர்ந்த வேளாண்மை துறையில் உதவி இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்ற ராமச்சந்திரன் தனது சொந்த செலவில் வேலையின்றி தவிக்கும் முடிதிருத்தும் தொழிலாளிகள், சலவைத் தொழிலாளிகள், வீட்டு வேலை செய்யும் பெண்கள், தூய்மை தொழிலாளிகள் உள்ளிட்ட நலிவடைந்தவர்களுக்கு உதவ வேண்டுமென முடிவு செய்தார்.

இதனைத் தொடர்ந்து இன்று ராமச்சந்திரன் தனது இல்லத்தில் வைத்து அனைத்து தொழிலாளிகளையும் அழைத்து அவர்களது குடும்பத்திற்கு தேவையான அரிசி காய்கறி உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். சுமார் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டது.அப்போது நோய் எதிர்ப்பு சக்தியான கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.தொடர்ந்து வேளாண் அதிகாரி ராமச்சந்திரன் கூறுகையில் கொரோனா காலத்தில் வருவாய் இன்றி தவிக்கும் இதுபோன்று தொழிலாளர்களுக்கு அனைவரும் மன மகிழ்ச்சியோடு உதவ வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

Updated On: 12 Jun 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    திமுக எம்எல்ஏக்களுக்கு திடீர் உத்தரவு..!
  2. வீடியோ
    🔴LIVE : ஸ்ரீ ராஜ ராஜேஸ்வர சுவாமி கோவிலில் பாரத பிரதமர் மோடி தரிசனம்...
  3. கல்வி
    மத்திய பல்கலைக்கழகங்கள் பற்றி தெரியுமா மாணவர்களே..?
  4. கலசப்பாக்கம்
    அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு..!
  5. சுற்றுலா
    ஊட்டி போக போறீங்களா...? இதை படிச்சிட்டு மகிழ்ச்சியா போயிட்டு
  6. வந்தவாசி
    வந்தவாசி அருகே லாரி கவிழ்ந்து விபத்து..!
  7. வீடியோ
    என் வெற்றிக்கு யார் காரணம் ! விழுப்புரம் மாணவி அசத்தல் பதில் !...
  8. வீடியோ
    பழுக்க கொட்டப்பட்ட அனல் கங்கின் மேல் தீமிதித்த பக்தர்கள்!#devotional...
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் பசுமை பந்தல் அமைப்பு
  10. ஆன்மீகம்
    நம் கஷ்டங்களை நீக்கும் சக்தி யாரிடம் உள்ளது..!