கொரோனா தடுப்பு குறித்து நாங்குநேரி எம்எல்ஏ ஆலோசனை

கொரோனா தடுப்பு குறித்து நாங்குநேரி எம்எல்ஏ ஆலோசனை
X

நாங்குநேரி எம்எல்ஏ, மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தியபோது.

கொரோனா தடுப்பு குறித்து மூலைக்கரைப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்களுடன் நாங்குநேரி எம்எல்ஏஆலோசனை நடத்தினார்.

திருநெல்வேலி மாவட்டம்: நாங்குநேரி தாலுகா மூலக்கரைப்பட்டியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன், கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள், மருத்துவமனைக்கு தேவையான புதிய தேவைகள், வசதிகள், திட்டங்கள் குறித்து வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் குருநாதன், டாக்டர் முத்துலட்சுமி ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது மருத்துவர்கள் பல்வேறு கருத்துக்களை கூறினர்.

Tags

Next Story
AI மரங்களை நடவு செய்வதில் புரட்சி: சரியான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது?