/* */

கொடை விழாவில் தகராறு: தட்டிக்கேட்ட வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது

கோவில் கொடை விழாவில் அரிவாளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

HIGHLIGHTS

கொடை விழாவில் தகராறு: தட்டிக்கேட்ட வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது
X

கோவில் கொடை விழாவில் தகராறு செய்து அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட மூன்று நபர்கள் கைது.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பட்டர்புத்தில் 10-ம் தேதி அன்று கோவில் கொடை விழா நடைபெற்றது. அப்போது பட்டர்புரத்தை சேர்ந்த சுரேஷ்(21), மனோஜ்குமார்(22), மற்றும் சக்திவேல்(21), ஆகியோர் சிறுவர்களிடம் தகராறில் ஈடுபட்டதை பட்டர்புரத்தை சேர்ந்த சுடலை கண்ணு என்ற சுரேஷ்(21) கண்டித்துள்ளார்.

பின்னர் சிறிது நேரம் கழித்து ஆயுதங்களுடன் வந்த மூன்று பேரும் சுடலைகண்ணுவை அவதூறாகப் பேசி அரிவாளால் தாக்கி காயம் ஏற்படுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சுடலைக்கண்ணு நாங்குநேரி காவல் நிலையத்தில் 11-ம் தேதி அன்று அளித்த புகாரின் அடிப்படையில் நாங்குநேரி காவல் ஆய்வாளர் காளியப்பன் விசாரணை செய்து சுடலைக்கண்ணுவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றவாளிகள் மூன்று போரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.

Updated On: 13 Aug 2021 5:21 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  2. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  3. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  4. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  5. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  6. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  7. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  8. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!
  9. திருவள்ளூர்
    நீதிமன்ற அலுவலக உதவியாளர் கன்னத்தில் அறைந்த ஜூஸ் கடை உரிமையாளர்!
  10. வீடியோ
    அரசியல் அட்வைஸ் கொடுத்த லாரன்ஸ் அம்மா | பதில் சொன்ன ராகவா மாஸ்டர் |...