நெல்லையில் தாய் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த மகள் பரபரப்பு
பைல் படம்
நான்குநேரி அருகே உள்ள பட்டர்புரத்தை சேர்ந்தவர் முத்தையா மனைவி வடிவு( 65). இவரது மகள் இசக்கியம்மாள்(40). முத்தையா பல ஆண்டுகளுக்கு முன்பே காலமானதால் வடிவு அவல் வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தி வந்தார்.
பத்தாண்டுகளுக்கு முன் ஒரே மகளான இசக்கியம்மாளை மேலப்பாளையத்தை சேர்ந்த ராஜ் (41) என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார்.இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் இசக்கியம்மாள் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த நான்கு வருடங்களாக தாய் வீட்டிற்கு வந்து குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வடிவிடமிருந்து 50 ஆயிரம் ரூபாயை இசக்கியம்மாள் கடனாக பெற்றுள்ளார். அந்த பணத்தை திருப்பி கொடுப்பது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் இசக்கியம்மாள் தன்மீதும், தாய் வடிவு மீதும வீட்டில் இருந்த மண்ணெண்ணையை ஊற்றியுள்ளார். தொடர்ந்து இசக்கியம்மாள் வடிவு மீது தீ வைத்துள்ளார். இதில் வடிவு மீது மள மள வென் தீ பரவியதால் வெப்பம் தாங்காமல் வடிவு வீட்டை விட்டு வெளியே ஒடி வந்தாராம்.
இதனை அடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வடிவை மீட்டு சிகிட்சைக்காக பாளையங்கோட்டை ஐக்கிரவுண்ட் ஆஸ்பத்திரிக்குஅனுப்பி வைத்தனர். அங்கு வடிவு சிகிச்சை பெற்று வருகிறார் .
இதுகுறித்து அளித்த புகாரின்பேரில் நான்குநேரி எஸ். ஐ சொரிமுத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார் .
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu