/* */

நாங்குநேரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மகளிர் தின விழா கொண்டாட்டம்

நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன், முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் உள்ளிட்டோர் பங்கேற்பு.

HIGHLIGHTS

நாங்குநேரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மகளிர் தின விழா கொண்டாட்டம்
X

 நாங்குநேரி ஆர்.யூ.சி. மகாலில் காங்கிரஸ் கட்சி சார்பில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி ஆர்.யூ.சி. மகாலில் காங்கிரஸ் கட்சி சார்பில், உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சியில் கட்சியின் மாநில பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன் வாழ்த்தி பேசினார். பெண்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ரூபி மனோகரன் எம்.எல்.ஏ.வின் மனைவி ரூபியின் பிறந்த நாள் விழாவையொட்டி கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினர்.

விழாவில் மாநில மகளிர் அணி பொதுச்செயலாளர் குளோரிந்தாள். கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவர் அமுதா கார்த்திகேயன், மாவட்ட கவுன்சிலர் தனி தங்கம் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 14 March 2022 1:58 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  2. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  3. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  4. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  5. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...
  6. ஆன்மீகம்
    மர்ம நிழல்! விஞ்ஞானம் தோற்றது எப்படி? மெய்ஞானத்தால் அறிவியல் வளர்த்த...
  7. இந்தியா
    இந்தியாவின் சூப்பர்சானிக் டர்பீடோக்கள்..! கதறும் சீனா, அலறும்...
  8. சினிமா
    பாடல்களுக்கு ராயல்டி! பணத்தாசை பிடித்தவரா இளையராஜா?
  9. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் கைது : மக்கள் என்ன சொல்றாங்க தெரியுமா..?
  10. தமிழ்நாடு
    வறட்சியின் பாதிப்பு :உயிரிழக்கும் கால்நடைகள்..!