/* */

திருக்குறுங்குடியில் விவசாயிகளுக்கு வாழை நார் மதிப்பு கூட்டுதல் பயிற்சி

திருக்குறுங்குடியில் விவசாயிகளுக்கு வாழை நார் மதிப்பு கூட்டுதல் குறித்து பயிற்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

திருக்குறுங்குடியில் விவசாயிகளுக்கு வாழை நார் மதிப்பு கூட்டுதல் பயிற்சி
X

திருக்குறுங்குடியில் விவசாயிகளுக்கு வாழை நார் மதிப்பு கூட்டுதல் குறித்து பயிற்சி நடைபெற்றது.

களக்காடு வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் கீழ் தோட்டகலை மலைப்பயிர்கள் துறையின் மூலம் வாழை நார் மதிப்பு கூட்டுதல் குறித்து விவசாயிகளுக்கு திருக்குறுங்குடியில் வைத்து பயிற்சி நடைபெற்றது.

களக்காடு வட்டாரத்தில் 2500 ஹெக்டர் பரப்பில் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வாழை தார் அறுவடை செய்த பின் மேற்கொள்ள வேண்டிய தொழில்நுட்பமான வாழை மட்டை உலர வைத்து நார் எடுத்து மதிப்பு கூட்டிய கைவினைப் பொருட்கள் தயார் செய்வது குறித்து செயல் விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சி வுஏளு அறக்கட்டளை வளாகம் திருக்குறுங்குடி வட்டார மகளிர் விவசாயிகளுக்கும் , சுய உதவி குழு மகளிர்களுக்கும் அளிக்கப்பட்டது.

இப்பயிற்சியில் திருநெல்வேலி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் கஜேந்திர பாண்டியன் தலைமையேற்று பேசினார். உழவர் பயிற்சி நிலையத்தின் வேளாண்மை துணை இயக்குநர் டேவிட் டென்னிஷன் , வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் வசந்தி , தோட்டகலை உதவி இயக்குநர் திலீப் , துணை வேளாண்மை அலுவலர் காசி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். செய்யது அலி பாத்திமா மற்றும் வீரலெட்சுமி ஆகியோர் செயல் விளக்கப்பயிற்சி அளித்தனர். வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஜாய் பத்ம தினேஷ் நன்றி கூறினார்.

இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் திரிசூலம் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் அருணாசலம் செய்திருந்தார். இப்பயிற்சியில் 40 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Updated On: 5 March 2022 1:45 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  2. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  4. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  5. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  6. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  7. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  8. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  9. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை