நெல்லை:பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் கைது.
X
By - M.Ganapathi, Reporter |23 July 2021 10:46 PM IST
மூலக்கரைப்பட்டியில் பெண்ணை கொலை செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.
மூலக்கரைபட்டியில் பெண்ணை கொலை செய்த வழக்கில் ஒருவர் கைது.
நெல்லை மாவட்டம், மூலக்கரைப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மூலக்கரைப்பட்டி பகுதியில் கடந்த 17 - ஆம் தேதி பொட்டல் தெருவை சேர்ந்த ராஜலட்சுமி என்பவரை அவரது கணவர் மற்றும் மருமகன் ஆகியோர் சேர்ந்து வெட்டி கொலை செய்தனர்.
ராஜலெட்சுமியை கொலை செய்த வேலாயுதம்(60), அபிமன்யு (33), ஆகிய இருவரையும் 18ம் தேதி போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். மேலும், இக்கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட, கல்லத்தி நடுத்தெருவை சேர்ந்த மோகன்ராஜ் (40) என்பவரை நாங்குநேரி வட்ட காவல் ஆய்வாளர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைத்தார் .
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu