/* */

நெல்லையில் பாரதியார் நினைவு கலை இலக்கியப் போட்டிகள்

4 மாவட்டங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

HIGHLIGHTS

நெல்லையில் பாரதியார் நினைவு கலை இலக்கியப் போட்டிகள்
X

பாரதியார் உலகப் பொது சேவை நிதியத்தின் சார்பில் முப்பத்தி நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து பாரதியாருடைய கருத்துக்களை இன்றைய சமுதாயத்திடம் கொண்டு செல்லும் பொருட்டு பேச்சு, கட்டுரை, பாட்டு, கவிதை என நான்கு பிரிவுகளில் தொடக்க நிலை, உயர்நிலை, மேல்நிலை மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியே கலை இலக்கியப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இதன் முப்பத்தைந்தாவது ஆண்டு போட்டிகள் நெல்லை டவுண் லிட்டில் பிளவர் பள்ளியில் நடைபெற்றது. இதில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. நிகழ்விற்கு பாரதியார் உலகப் பொதுச்சேவை நிதியத் தலைவர் கல்வியாளர் அ.மரியசூசை தலைமை தாங்கினார். பொது நிதியாளர் கவிஞர் பாப்பாக்குடி இரா.செல்வமணி முன்னிலை வகித்தார். கவிஞர் சுப்பையா மற்றும் பாடகர் கி.சந்திரபாபு தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை பாடினர். திருக்குறளின் பெருமைகள் குறித்த பாடலை மெல்லிசைப் பாடகர் அருணா சிவாஜி பாடினார். பாரதியார் பாடல்களை திரைப்பட பின்னணிப் பாடகர் பேரா.ஆதிவராகமூர்த்தி பாடினார். அமைப்பின் துணைப் பொதுச் செயலாளர் கவிஞர்.சு. முத்துசாமி அனைவரையும் வரவேற்றார். பொதுச் செயலாளர் முனைவர் கவிஞர் கோ.கணபதி சுப்பிரமணியன் நிகழ்வின் நோக்கத்தினை எடுத்துரைத்து தொடக்க உரையாற்றினார். எழுத்தாளர் இரா.நாறும்பூநாதன், தொழிலதிபர் ஏ.எஸ்.எம்.அரசன் சுப்பையா, கே.டி. கோசல்ராம் நற்பணி மன்ற தலைவர் பி.ஆர்.ஏ.பொன்னுசாமி ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட வருவாய் அலுவலர்.அ.பெருமாள் கலந்துகொண்டு பாரதியின் கருத்துக்களை நடைமுறைப்படுத்தும் அறிஞர்களுக்கு 'பாரதிப்பணிச் செல்வர்' விருதுகளை வழங்கியதோடு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவியருக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கி விழாச் சிறப்புரையாற்றினார்.

அகில இந்திய வானொலி மூத்த அறிவிப்பாளர் உமா கனகராஜ், பேராசிரியர் முனைவர்.சௌந்தர மகாதேவன், அரவிந்த் கண் வங்கி பொறுப்பாளர் சாரதா , பரதநாட்டிய ஆசிரியை விசாலாட்சி, பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் க.செல்வன், இலஞ்சி ராமசாமி பிள்ளை மேல்நிலைப் பள்ளி ஓவிய ஆசிரியர் கணேசன், மு.ந.அப்துல்ரகுமான் மேல்நிலைப்பள்ளி ஓவிய ஆசிரியர் பொன்.வள்ளிநாயகம், சமூக ஆர்வலர் இசக்கிராஜா ஆகியோர் விருதுகளைப் பெற்றனர். போட்டி நடுவர்களாக பாடகர் சம்சுதீன், பாடகி கஸ்தூரிதிலகம், இசை ஆசிரியர் ஜேசுராஜன், ஜெயேந்திரா பள்ளி துணைமுதல்வர் கங்காமணி, கவிஞர்கள் உமா, வேதிகா, செ.ச.பிரபு, சக்திவேலாயுதம், ம.தி.தா.பள்ளி என்.எஸ்.எஸ்.திட்ட அலுவலர் சோமசுந்தரம், ஆசிரியர்கள் சிவா, முத்துலெட்சுமி, ஜெயஸ்ரீ, ராஜாத்தியம்மாள் ஆகியோர் செயல்பட்டனர். நிகழ்வில் சிவசக்தி நாட்டியக் குழுவினர் பாரதி பாடல்களுக்கு நடனம் ஆடினர். செய்தி தொடர்பாளர் பூ.ஆறுமுகம் நன்றி கூறினார். விழாவில் தமிழ் ஆர்வலர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

Updated On: 11 April 2022 3:17 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  2. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  4. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  5. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  6. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  9. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?