குண்டர் தடுப்பு சட்டத்தில் இளைஞர் கைது
![குண்டர் தடுப்பு சட்டத்தில் இளைஞர் கைது குண்டர் தடுப்பு சட்டத்தில் இளைஞர் கைது](https://www.nativenews.in/h-upload/2021/04/13/1014971-gundas-arest.webp)
திருட்டு மற்றும் வழிப்பறியில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்த நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல்நிலையத்தில் திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகளில் எதிரியான அம்பாசமுத்திரம் வட்டம், பிரம்மதேசம், வெயிலான் தெருவை சேர்ந்த முப்பிடாதி என்பவரின் மகன் கிங்ஸ்டன் (26) என்பவர் திருட்டு மற்றும் வழிப்பறி வழக்கில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக மாவட்ட எஸ்பி., மணிவண்ணன் கவனத்திற்கு வந்ததால், மேற்படி நபரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க அம்பாசமுத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர்கண்ணன் அறிவுறுத்தியதன் பேரில், மேற்படி நபரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மாவட்ட எஸ்பி பரிந்துரை படி, திருநெல்வேலி கலெக்டர் உத்தரவின் பேரில், கிங்ஸ்டனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்த தடுப்புக் காவல் உத்தரவு ஆணையை சமர்ப்பித்து கிங்ஸ்டன் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu