கல்வெட்டான்குழியில் தவறி விழுந்தவர் பலி

கல்வெட்டான்குழியில் தவறி விழுந்தவர் பலி
அம்பாசமுத்திரம் அருகே கல்வெட்டான்குழியில் விழுந்த முதியவர் உயிரிழந்துள்ளார்.

அம்பாசமுத்திரம் அருகே கல்வெட்டான்குழியில் விழுந்த முதியவர் உயிரிழந்துள்ளார்.

அம்பாசமுத்திரம் அருகே முடப்பாலம் பகுதியில் பயன்பாட்டில் இல்லாத கல்குவாரி ஒன்று இருக்கிறது. அதில் நீர் தேங்கி கல்வெட்டான்குழி என்று அழைக்கப்பட்டு வருகிறது. இந்த இடத்தில் நேற்றைய தினம் காலையில் முதியவர் ஒருவர் மிதப்பதை பார்த்த நபர், காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர் அளித்த தகவலின்பேரில் காவல்துறையும் அதன்மூலம் தீயணைப்பு துறை ஊழியர்களும் சம்பவ இடத்துக்கு வந்து முதியவரின் உடலைக் கைப்பற்றினர்.

தீயணைப்பு துறையினர் மீட்ட உடலை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். காவலர்கள் நடத்திய விசாரணையில் இறந்தவர் குறித்த தகவல்கள் தெரியவந்தன. சம்பந்தர் தெருவைச் சேர்ந்த நடராஜன் தச்சுத் தொழில் செய்து வருகிறார். இவர் சம்பவ இடத்துக்கு என்ன காரணத்துக்காக சென்றார்கள் என்பது தெரியவில்லை. அவர் தவறி விழுந்திருக்கலாம் என்றே காவல்துறையினர் கருதுகின்றனர். இதுகுறித்து வழக்கப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story