/* */

நெல்லை அருகே மானை வேட்டையாடிய ஏழு பேர் கார், துப்பாக்கியுடன் கைது

நெல்லை அருகே மானை வேட்டையாடிய ஏழு பேர் கார், துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

நெல்லை அருகே மானை வேட்டையாடிய ஏழு பேர் கார், துப்பாக்கியுடன் கைது
X

மானை வேட்டையாட பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் பொருட்கள்.

நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி பகுதியில் இன்று அதிகாலையில் எஸ்.ஐ. ஆபிரகாம், காவல‌ர் முத்துராஜ் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரில் இறந்த நிலையில் மான், இரண்டு துப்பாக்கிகள், தோட்டாக்கள், கத்தி, உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தது தெரியவந்தது.


தொடர்ந்து போலீசார் அவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் பாப்பாக்குடி அருகேயுள்ள பனையங்குறிச்சி என்ற பகுதியில் துப்பாக்கியால் மானை வேட்டையாடியது தெரிய வந்தது.


தொடர்ந்து நெல்லை வனச்சரகர் சரவணக்குமார் தலைமையிலான வனத்துறையினர் பாப்பாக்குடி காவல் நிலையம் வந்து வேட்டைக்கு பயன்படுத்திய துப்பாக்கிகள், தோட்டாக்கள், இறந்த மான், கத்திகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் மானை வேட்டையாடிய கல்லூரை சேர்ந்த ராமையா, சேரன்மகாதேவியை சேர்ந்த குமார், ரமேஷ், ஊத்துமலை சேர்ந்த கிருஷ்ணா, மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த யோஸ்வா ராஜ், வாடிப்பட்டியை சேர்ந்த போவாஸ், கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் ஆகிய 7 பேர் கொண்ட கும்பலையும் வனத்துறையினர் கைது செய்து அழைத்து செய்தனர். மேலும் சுட்டு கொல்லப்பட்ட மான் சுமார் 2 வயது மதிக்கத்தக்க பெண் என்று வனத்துறையினர் தரப்பில் தெரிவித்தனர்.

Updated On: 1 May 2023 6:39 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  3. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  5. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  6. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு
  8. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில், பலத்த மழை: சாலைகளில் மழைநீர்!
  9. குமாரபாளையம்
    10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி மாணவ,...
  10. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...